12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து?மத்திய கல்வி வாரியங்கள் பரிசீலனை!!
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கல்வி நிறுவனங்கள் முறையாக இயங்க பல்வேறு இன்னல்கள் எழுந்து வரும் நிலையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வினை ரத்து செய்வது குறித்து மத்திய கல்வி வாரியங்கள் பரிசீலனை செய்து வருகிறது.
12ம் வகுப்பு பொதுத்தேர்வு:
நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் தொற்று அதிக அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தி வருவதன் காரணமாக கடந்த ஆண்டு முதல் அனைத்து அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டது. இதனை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மாணாக்கர்களின் நலன் கருதி அவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் மற்றும் தேர்வுகளை கடந்த ஆண்டு நடத்தி வந்தது. இதனை தொடர்ந்து நடப்பு ஆண்டும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையாக உருவெடுத்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
TN Job “FB Group” Join Now
இதனால் கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் நேரடி கல்வி வகுப்புகள் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வினை நடத்துவது குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு கட்ட ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து முக்கிய பாடங்களை மட்டும் வைத்து பொதுத்தேர்வினை வருகிற ஆகஸ்ட் மாதத்தில் நடத்த சில மாநில அரசுகள் அறிவுறுத்தி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் விளக்கம்!!
ஆனால் கொரோனாவின் வீரியம் தொடர்ந்து ஆதிக்கத்தை செலுத்தி வருவதால் பொதுத்தேர்வினை ரத்து செய்து கடந்த தேர்வின் அடிப்படையில் மதிப்பெண்களை வழங்க சிபிஎஸ்சி, ஐசிஎஸ்சி ஆகிய கல்வி நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 11 மற்றும் 12ம் வகுப்ப்பின் பொதுத்தேர்வில் சராசரி மதிப்பெண் பட்டியலை பள்ளிகள் வழங்குமாறு ஐசிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வினை குறித்த இறுதி முடிவு வருகிற ஜூன் மாதம் 1ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.