நாடு முழுவதும் ஒரே நாளில் 45,951 பேருக்கு கொரோனா – 817 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 45,951 பேர் கொரோனவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் கிட்டத்தட்ட 40 நாட்களுக்கு பின்னாக பலி எண்ணிக்கையானது 817 ஆக குறைந்துள்ளது.
கொரோனா பாதிப்பு
கொரோனா 2 ஆம் அலையின் தாக்கமானது இந்தியாவில் வெகுவாக குறைந்துள்ளது. அந்த வகையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்னாக பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தி வந்த கொரோனா பேரலையால் நாளொன்றுக்கு லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். அதாவது கடந்த மே மாத இடையில் தினசரி நோய் பாதிப்பின் எண்ணிக்கையானது 4 லட்சமாக பதிவு செய்யப்பட்டு வந்தது. அதே நேரத்தில் இறப்பு எண்ணிக்கையும் 4 ஆயிரத்தை கடந்து பதிவானது.
தமிழகத்தில் படிப்படியாக பள்ளிகள் திறக்க அனுமதி – அரசிடம் கோரிக்கை!
இதை தொடர்ந்து மாநிலங்கள் தோறும் விதிக்கப்பட்டு வந்த முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக இந்த புதிய பாதிப்பானது 50 ஆயிரத்துக்கும் கீழாக குறைந்து தற்போது பதிவு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 45,951 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,03,62,848 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 817 ஆக பதிவாகியுள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 3,98,454 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளுக்கான விமான சேவைக்கு தடை – ஜூலை 15 வரை நீட்டிப்பு!
இந்த பாதிப்பு விகிதமானது நேற்றைய (ஜூன் 29) பாதிப்பை விட 8 ஆயிரம் அதிகமாகும். இதற்கிடையில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு நேற்று ஒரே நாளில் 60,729 பேர் குணமடைந்துள்ளனர். அந்த வகையில் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 2,94,27,330 ஆக உயர்ந்துள்ளது. தவிர 5,37,064 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் மொத்தம் 33,28,54,527 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.