தமிழகத்தில் படிப்படியாக பள்ளிகள் திறக்க அனுமதி – அரசிடம் கோரிக்கை!

1
தமிழகத்தில் படிப்படியாக பள்ளிகள் திறக்க அனுமதி - அரசிடம் கோரிக்கை!
தமிழகத்தில் படிப்படியாக பள்ளிகள் திறக்க அனுமதி - அரசிடம் கோரிக்கை!
தமிழகத்தில் படிப்படியாக பள்ளிகள் திறக்க அனுமதி – அரசிடம் கோரிக்கை!

தமிழகத்தில் படிப்படியாக பள்ளிகளை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு நர்சரி மற்றும் பிரைமரி மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளி சங்க பொதுச்செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் திறப்பு:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இதுவரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனால் தனியார் பள்ளிகள் பெரும் வருவாய் இழப்பை சந்தித்துள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

ssc

மேலும் அந்த பள்ளிகளில் பணிபுரிந்த ஆசிரியர்கள், பணியாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். தனியார் பள்ளிகளில் சுமார் 50 ஆயிரம் பள்ளி வாகனங்கள் உள்ளன. அந்த வாகனங்கள் மார்ச் 17 முதல் இயங்கப்படவில்லை. ஓடாத அந்த வாகனங்களுக்கு சாலை வரி, இருக்கை வரி, இன்சூரன்ஸ், எப்.சி கட்டணம் போன்றவை செலுத்த வேண்டிய நிலைமை ஏற்படுகிறது.

இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளுக்கான விமான சேவைக்கு தடை – ஜூலை 15 வரை நீட்டிப்பு!

இது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் மனு வழங்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகள் திறக்காத காரணத்தினால் வாகனங்களுக்கு வரி செலுத்த முடியவில்லை. எனவே பள்ளிகளை படிப்படியாக திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலில் 12 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் அல்லது ஒரு நாள் விட்டு ஒருநாள் பள்ளிகளை திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் வருகிற ஜூலை 6 ஆம் தேதி இது குறித்து முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!