இந்தியாவில் கொரோனா 3வது அலை பரவல் – பிரதமர் நாளை ஆலோசனை!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் நாளை (ஜூன் 30) மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.
கொரோனா 3வது அலை:
இந்தியாவில் கடந்த நான்கு மாத காலத்திற்கும் மேலாக கொரோனா வைரஸ் தொற்று இரண்டாவது அலையாக உருவெடுத்து மக்களை கடுமையாக தாக்கி வருகிறது. இதன் காரணமாக மாநிலங்கள் தோறும் கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ஊரடங்கு விதிக்கப்பட்ட விளைவாக தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை கட்டுக்குள் வர தொடங்கியது. இதனால் மாநிலங்களில் விதிக்கப்பட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசு வழங்கும் ரூ.3,500 மாத உதவித்தொகை – ஆகஸ்ட் 31 கடைசி நாள்!
இந்நிலையில் இந்தியாவில் விரைவில் கொரோனா வைரஸ் தொற்று மூன்றாவது அலையாக உருவெடுக்கும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. இதன் காரணமாக அனைத்து மாநிலங்களும் கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலை உருவெடுக்காமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா 3வது அலை முன்னெச்சரிக்கை குறித்து நாளை (ஜூன் 30) பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் முக்கிய ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
TN Job “FB Group” Join Now
அதன்படி நாளை (ஜூன் 30) பிரதமர் மோடி அவர்கள் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் மூன்றாவது அலைக்கான தடுப்பூசி திருத்தப்படுத்தும் பணிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளனர். இதனை தொடர்ந்து நாளை (ஜூன் 30) மாலை மத்திய அமைச்சர்கள் குழு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.