தமிழக அரசு வழங்கும் ரூ.3,500 மாத உதவித்தொகை – ஆகஸ்ட் 31 கடைசி நாள்!
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு ஆண்டுதோறும் உதவித்தொகையை அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில் 2021 ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்களை ஆகஸ்ட் 31 க்குள் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிஞர்களுக்கு உதவித்தொகை
தமிழகத்தில் செயல்பட்டு வரும் தமிழ் வளர்ச்சித் துறையானது, வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு என சிறப்பு சலுகைகளை அளித்து வருகிறது. அந்த வகையில் தகுதியுடைய நபர்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு உதவித்தொகை தமிழக அரசால் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகையை பெற்றுக்கொள்வதற்கு சில நிபந்தனைகளுடன் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. அதாவது அரசு வழங்கும் உதவித் தொகையை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பங்களை ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு வலியுறுத்தியுள்ளார்.
நாடு முழுவதும் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் – ஜூலை 31க்குள் அமல்!
இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்காக தமிழக அரசு வழங்கும் மாத உதவித் தொகையை பெறுவதற்கு, 2021-22 ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அந்த வகையில் விண்ணப்பதாரர்கள் 01.01.2021 ஆம் தேதிக்குள் 58 வயது நிறைவடைந்திருப்பவராகவும், ஆண்டு வருமானம் ரூ.72,000 பெறுபவராகவும் இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் பெறப்பட்ட வருமான சான்றிதழ், தமிழ்ப்பணி ஆற்றியதற்கான ஆதாரங்கள், தகுதிநிலை சான்றிதழ் அனைத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
இதற்கான விண்ணப்பங்களை தமிழ் வளர்ச்சித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் ஒருவருக்கு மாதந்தோறும் உதவித்தொகையாக ரூபாய் 3,500, மருத்துவப்படி ரூ.500 வழங்கப்படும். அந்த வகையில் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சித் துறையின் இணை இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.