நாடு முழுவதும் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் – ஜூலை 31க்குள் அமல்!
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்கும் வகையில் அனைத்து மாநிலங்களும் ஜூலை 31 ஆம் தேதிக்குள் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒரே நாடு ஒரே ரேஷன்:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது . இதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்கள் மக்களுக்கு தேவையான சில நிவாரணங்களை வழங்கி வருகின்றனர். இதனால் மக்கள் ஓரளவு நன்மை அடைந்துள்ளனர். ஆனால் புலம்பெயர் தொழிலாளர்கள் நிலைமை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!
நிலைமையை சரி செய்ய புலம்பெயர தொழிலாளர்களின் வழக்குகளை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. அதன்படி கொரோனா காரணமாக புலம்பெயர் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். புலம்பெயர் தொழிலாளர்கள், நாட்டின் எந்தப் பகுதியிலும் ரேஷன் பொருட்களைப் பெற வழிவகை செய்யும் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை இதுவரை அமல்படுத்தாத மாநிலங்கள், அதனை ஜூலை 31ஆம் தேதிக்குள் அமல்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மாநிலங்களின் தேவைக்கேற்ப புலம்பெயர் தொழிலாளர்களுக்கான உணவு தானியங்களை ஒதுக்கவும், அவற்றை விநியோகம் செய்யவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உலர் ரேஷன் வழங்க மாநிலங்கள் திட்டத்தைக் கொண்டுவர வேண்டும் எனவும் இவை கொரோனா பரவல் முடியும் வரை அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.