கொரோனா 3ம் அலை; தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு – மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர்!!
தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்றின் 2ம் அலை பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில், ஒரு வாரம் தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யுமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் அறிவித்துள்ளார்.
3ம் அலை:
தமிழகத்தில் கொரோனா 3ம் அலை பரவல் குறித்து மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இந்த முறை தொறறு குழந்தைகளை அதிக அளவில் தாக்கம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் கொரோனா பெருந்தொற்றை தவிர்க்கும் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சார துவக்கவிழா கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பல தகவல்களை அளித்துள்ளார். அதன்படி, மாநிலத்தில் 21 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரிக்கும் நிலையில் உள்ளது.
தமிழகத்தில் மாதம் ஒரு முறை மின்கணக்கீடு திட்டம் விரைவில் – அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு!
இதனால் தொற்று மற்றவர்களிடம் இருந்து நமக்கும், நம்மிடம் இருந்து மற்றவர்களுக்கும் பரவ கூடாது என்ற கருத்தில் உள்ள குறும்படங்களை தயாரிக்குமாறு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். நமது அண்டை மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால் தமிழகத்தில் மக்கள் உறுதியான இயக்கமாக மாற்றும் பொருட்டு விழிபுணர்களை ஏற்படுத்துமாறும் முதல்வர் அறிவித்துள்ளார். இதற்காக பொதுமக்கள் தங்களின் ஒத்துழைப்புக்களை அரசுக்கு தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
TN Job “FB Group” Join Now
தமிழகத்தில் இதுவரை 2 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள மாவட்டங்களில் கூடுதலாக தடுப்பூசி செலுத்த முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். மத்திய அரசு தமிழகத்தில் ஒரு நாளிற்கு 650 கே.எல் ஆக்சிஜன் ஒதுக்கியுள்ளனர். ஆனால் 150 கே.எல் போதுமானதாகும். மூன்றாம் அலை குழந்தைகளை அதிகம் தாக்கும் என்று அறிவுறுத்தியுள்ளதால், 25% ஆக்ஸிஜன் படுக்கை குழந்தைகளுக்கு அமைக்க வேண்டும் என்று முதல்வர் கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகள் 1.60 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.