கொரோனாவுக்கு எதிரான 2 DG தடுப்பு மருந்து – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்!!
இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக பயனளிக்கக்கூடிய புதிய மருந்து ஒன்று தயாரிக்கப்பட்டு இன்று (மே 17) முதல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த மருந்து கொரோனா சிகிச்சைக்கு விரைந்து பலன் அளிக்கக்கூடியது என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தடுப்பு மருந்து:
இந்தியாவில் கொரோனா சிகிச்சைக்காக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. தவிர அரசு பரிந்துரை செய்த ரெம்டெசிவிர் தடுப்பு மருந்துகளும் பெருமளவில் உபயோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) மற்றும் ஐதராபாத்தை சேர்ந்த டாக்டர் ரெட்டீஸ் மருத்துவ நிறுவனமும் இணைந்து தூள் வடிவிலான கொரோனா தடுப்பு மருந்துகளை தயாரித்துள்ளது.
WhatsApp பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – புதிய வசதி அறிமுகம்!!
இந்த மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்த பின்பாக பயன்பாட்டுக்கு வரும் 2 DG தடுப்பு மருந்துகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் டெல்லியில் இன்று (மே 17) அறிமுகம் செய்துள்ளார். இந்த நிகழ்வின் பின்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கொரோனாவுக்கு எதிரான 2 DG தடுப்பு மருந்து இந்தியாவிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை பயன்படுத்துவதன் மூலம் ஆச்சிஜன் தேவைகளை குறைக்க முடியும்.
TN Job “FB Group” Join Now
மேலும் குறைவான நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை விரைவில் குணப்படுத்துவதற்கு இந்த மருந்து பயன்படுகிறது. கடந்த ஒரு ஆண்டாக கொரோனாவுக்கு எதிராக நாம் போராடி வருகிறோம். தற்போது இந்திய விஞ்ஞானிகளின் தொடர் முயற்சியால் இந்த மருந்து மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது. மேலும் பிரதமரின் செயப்பாட்டுக்கு கீழ் இயங்கி வரும் DRDO ன் சேவைக்கு பாராட்டுக்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.