தமிழகத்தில் போலிச் சான்றிதழ் தடுப்பு விவகாரம் – அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!!
தமிழகத்தில் பட்டியல் இனத்தவர் பழங்குடியினர் எனக்கூறி போலிச் சான்றிதழ்களை பெறுவதாக புகார்கள் எழுந்துள்ளன. அதனால் இதனை தடுக்கும் விதமாக விதிகளை வகுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
போலிச் சான்றிதழ்:
தமிழகத்தில் போலிச் சான்றிதழ்கள் மூலமாக அரசு பணியிடங்களில் வேலை பெறுவது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகிறது. இதில் குறிப்பாக பழங்குடியினர், பட்டியலினத்தவர் எனக் கூறி போலிச் சான்றிதழ்களை பெற்று, இதன் மூலம் சுலபமாக அரசு பணியிடங்களில் வேலைவாய்ப்பினை பெற்று வருகின்றனர்.
ஆனால் உண்மையான பழங்குடியினர் மற்றும் பட்டியல் இனத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு சாதி சான்றிதழ் பெறுவதில் காலதாமதமும், பல்வேறு சிக்கல்களும் ஏற்பட்டு வருகிறது. மேலும் இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் தெரிவித்துள்ளதாவது, தமிழகத்தில் பட்டியலினத்தவர், பழங்குடியினர் எனக்கூறி போலிச் சான்றிதழ்கள் பெறுவதை தடுப்பதற்காக 8 வாரங்களில் விதிகளை வகுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அத்துடன் உண்மையான விண்ணப்பதாரர்களுக்கு எந்தவொரு இடையூறும் இல்லாமல் காலதாமதமின்றி சான்றிதழ்களை வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் போலிச் சான்றிதழ்கள் குறித்து தமிழக அரசு அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.