ஜூன் 21 முதல் பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்து துறை ஆலோசனை!!
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு ஜூன் 21 ம் தேதி முடிவடையும் நிலையில் அதன் பிறகு பேருந்துகளை இயக்குவது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் போக்குவரத்துத் துறை அமைச்சருடன் ஆலோசனை நடத்தினார்.
பேருந்துகள் இயக்கம்:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மே 10 ம் தேதி முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது மேலும், நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்காக, 15ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன.மளிகை, காய்கறி, பழக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது; மற்ற கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. பொது போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டது. தற்போது கொரோனா குறைந்தது வரும் நிலையில் அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகிறது.
தமிழகத்தில் புதிதாக 2000 மருத்துவர்கள் நியமனம் – அமைச்சர் தகவல்!
தளர்வுகளளுடன் கூடிய 3 ம் கட்ட ஊரடங்கானது வரும் ஜூன் 21 ம் தேதியுடன் முடிவடைகிறது. தற்போது அளிக்கப்பட்ட தளர்வுகளில் பேருந்து இயக்குவது பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை. மக்கள் பேருந்து சேவையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ஊரடங்கு முடிவடையும் நிலையில் 21 ம் தேதிக்கு பிறகு பேருந்துகளை இயக்குவது குறித்து இன்று ஸ்டாலின் அவர்கள் போக்குவரத்து துறை அமைச்சருடன் ஆலோசனை செய்து வருகிறார்.
தமிழகத்தில் மின்கட்டணம் செலுத்த காலஅவகாசம் நீட்டிப்பு? முதல்வருக்கு கோரிக்கை!!
கொரோனா பரவல் குறைந்துள்ள 27 மாவட்டங்களில் மட்டும் மாவட்டங்களில் இயக்கலமா என்பது குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. 21 ம் தேதிக்கு பிறகு அளிக்கப்படும் தளர்வுகளில் அனைவரும் எதிர்பார்க்கப்படுவது மீண்டும் பேருந்து சேவை குறித்த செய்தியைத்தான். தற்போது தலைமை செயலகத்தில் முதல்வர் தலைமையில் நடைபெற்று வரும் ஆலோசனையில் 21ம் தேதிக்கு முன்னரே பேருந்துகள் இயக்கப்படுவது பற்றி முடிவு எடுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.