தமிழகத்தில் மின்கட்டணம் செலுத்த காலஅவகாசம் நீட்டிப்பு? முதல்வருக்கு கோரிக்கை!!
தமிழகத்தில் ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால் தமிழக அரசு மின்கட்டணம் செலுத்துவதற்கு அளிக்கப்பட்டுள்ள கால அவகாசத்தை நீடிக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது.
மின்கட்டணம்:
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அச்சம் காரணமாக மாநிலம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழில் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. கடந்த ஒரு வாரமாக தான் அவை மீண்டும் 50% ஊழியர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் முதல் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருவதால் மின்கட்டணம் செலுத்துவதற்கு கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது.
கோகோ-கோலாவை துவம்சம் செய்த ரொனால்டோ – பல ஆயிரம் கோடிகள் இழப்பு!
நோய் தடுப்பு நடவடிக்கையாக மின்வாரியத்தின் பணியாளர்கள் மின்சார மீட்டரின் ரீடிங் கணக்கை எடுக்க செல்லவில்லை. இதனால் மின்கட்டணம் கட்டும் முறையில் பல குழப்பங்கள் எழுந்தது. இதனால் பொதுமக்கள் தங்கள் மீட்டரின் ரீடிங் அளவை மொபைலில் புகைப்படம் எடுத்துக் கொண்டு மின்கட்டணம் செலுத்த செல்லுமாறு மின்துறை அமைச்சர் அறிவுறுத்தினார். மேலும், தற்போது நோய் பரவல் தாக்கம் குறைந்து தொழில் நிறுவனங்கள் 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் இனி மின்கட்டணம் செலுத்த அவகாசம் தேவைப்படாது என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 10 ம் வகுப்பிற்கு மார்க் இல்லாமல் மதிப்பெண் சான்றிதழ் – அரசு திட்டம்!!
தமிழக அரசு மின்கட்டணம் செலுத்துவதற்கு வழங்கியுள்ள கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்துள்ள நிலையில், கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று முதல்வருக்கு மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், பாஜக தலைவர் எச்.ராஜா அவர்கள், தமிழக அரசின் மாத மாத மின்கட்டண முறையை அமல்படுத்துவதற்கு இதுவே சரியான தருணம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.