நீட் தேர்வு முடிவுகளில் ஏற்பட்ட குளறுபடி, மாணவிக்கு கிடைத்த வாய்ப்பு – நீதிமன்றம் உத்தரவு!
நாடு முழுவதும் மருத்துவ இளங்கலை படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வானது ஜூலை 17 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் மதுரையைச் சேர்ந்த மாணவி ஜெயசித்ரா நீட் தேர்வு ஓஎம்ஆர் ஷீட்டை நேரில் சென்று ஆய்வு செய்ய அனுமதிக்க கோரிய வழக்கில் நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது
நீட் தேர்வு முடிவு:
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான நீட் தேர்வானது நாடு முழுவதும் பல மாநிலங்களில் ஜூலை 17 ஆம் தேதி நடத்தப்பட்டது. நாடு முழுவதும் தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெற்றது. நாடு முழுவதும் இந்த தேர்வினை 17 லட்சத்து 78 ஆயிரத்து 725 பேர் எழுதினார்கள். தமிழகத்தை பொறுத்தவரை ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் இந்த தேர்வை எழுதினார்கள்.
இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் கடந்த 7 ஆம் தேதி நள்ளிரவு வெளியானது. அதில் மதுரையை சேர்ந்த மாணவி ஜெயசித்ரா தேர்வு எழுதிய நிலையில், குறைவான மதிப்பெண் பெற்றிருப்பதால் அது குறித்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் நான் பிளஸ்டூ முடித்துவிட்டு இந்த வருடம் மருத்துவ படிப்பிற்கான தேசிய திறனாய்வு நுழைவுத் தேர்வான நீட் தேர்வு எழுதி இருந்தேன். அந்த தேர்வில் 200 கேள்விகளுக்கு 141 கேள்விகளுக்கு சரியான பதிலை எழுதி இருந்தேன்.
இதற்கு முன்னதாக தேர்வு முகமை, தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களின் OMR சீட் மற்றும் கேள்விக்கான அனைத்து பதில்களையும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்தது. அதில் எனக்கு 720 மதிப்பெண்களுக்கு 564 மதிப்பெண்கள் சரியாக இருந்தது. ஆனால் கடந்த 7 ஆம் தேதி வெளியான தேர்வு முடிவில் எனக்கு 114 மதிப்பெண்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சதவிகித படி 48.8% கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் என்னுடைய பழைய மதிப்பெண்ணை ரத்து செய்து புதிய மதிப்பெண் பட்டியல் வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கானது நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அதில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்பதால் மாணவியின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்கிறது எனவும், மாணவி தான் எழுதிய நீட் தேர்வின் விடைத்தாளான OMR சீட்டை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்யலாம் என உத்தரவிட்டு வழக்கு விசாரணை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்