விஜய் டிவி “செல்லம்மா” சீரியல் நடிகர் அர்னவிற்கு நிபந்தனை ஜாமீன் – நீதிமன்றம் உத்தரவு!
விஜய் டிவி “செல்லம்மா” சீரியல் ஹீரோ நடிகர் அர்னவ், கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், தற்போது அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனால் அவர் தொடர்ந்து செல்லம்மா சீரியலில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
செல்லம்மா சீரியல்:
கடந்த மாதம் முதல் சமூக வலைத்தளங்களில் விஜய் டிவி செல்லம்மா சீரியல் நடிகர் அர்னவ் பற்றிய செய்தி தான் காட்டுத்தீ போல பரவி வருகிறது. நடிகர் அர்னவ், தன்னுடன் நடித்த சீரியல் நடிகை திவ்யாவை காதலித்து மதம் மாற்றி திருமணம் செய்துள்ளார். தற்போது திவ்யா கர்ப்பமாக இருக்கும் நிலையில், மற்ற பெண்களுடன் தேவையில்லாத பழக்கம் வைத்து கொண்டு, கர்ப்பிணி என பார்க்காமல் தன்னுடைய மனைவியை அடித்து துன்புறுத்தியதாக, அவருடைய மனைவி புகார் கொடுத்திருந்தார்.
நீ செத்தா எனக்கென்ன.. வெண்பாவின் சூழ்ச்சிக்கு எதிராக துணிந்து நின்ற பாரதி – தொடரின் அடுத்த கட்டம்!
Follow our Instagram for more Latest Updates
அதனால் அர்னவ் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தற்போது அவர் சிறையில் இருக்கும் நிலையில், அவருக்கு பெயில் கிடைக்காமல் இருந்தது. அதனால் அவர் செல்லம்மா சீரியலில் தொடர்ந்து நடிப்பாரா என ரசிகர்கள் கேள்வி கேட்டு வந்தனர். மேலும் இன்று காலை வெளியான தகவலின் படி அவருக்கு ஜாமீன் கிடைத்தால் தொடர்ந்து அவரே செல்லம்மா சீரியலில் நடிப்பார் என தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் தற்போது நடிகர் அர்னவிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனால் அவர் தொடர்ந்து செல்லம்மா சீரியலில் நடிப்பார் என்பதில் சந்தேகமில்லை.