நீ செத்தா எனக்கென்ன.. வெண்பாவின் சூழ்ச்சிக்கு எதிராக துணிந்து நின்ற பாரதி – தொடரின் அடுத்த கட்டம்!
பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா, கடைசி நேரத்திலும் கூட பாரதி எப்படியும் வந்து தன்னை திருமணம் செய்து கொள்வார் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.
நம்பிக்கையில் வெண்பா:
பாரதியை தான் எப்படியாவது அடைந்தே தீர வேண்டும் என்ற ஆசையில் வெண்பா செய்யாத குற்றம் இல்லை. தன்னுடன் படித்த சக தோழி ஹேமாவை கொலை செய்தது முதல்,10 வருடங்களாக பாரதியும், கண்ணம்மாவும் பிரிந்து வாழும் வகையில் சதித்திட்டத்தையும் தீட்டினார். வெண்பா விதைத்த சந்தேக விதை தான் பாரதியின் மனத்தில் விருட்சமாக வளர்ந்துள்ளது. ஒருவழியாக தற்கொலைக்கு முயற்சி செய்து பாரதியை திருமணம் செய்து கொள்ள சம்மதம் வாங்கியுள்ளார்.
Exams Daily Mobile App Download
ஆனால் பாரதி, DNA டெஸ்ட் ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறார். மும்பையில் இருந்து தான் டெஸ்ட் ரிசல்ட் வர வேண்டும் என்பதால் காத்திருப்பு நீண்டு கொண்டே செல்கிறது. ஒருவழியாக வெண்பாவின் திருமண நாளும் வந்து விடுகிறது. பாரதி கடைசி நேரத்தில் மனம் மாறி விடக்கூடாது என்பதற்காக புடவையில் மாத்திரையை மறைத்து வைத்திருப்பதாகவும், பாரதி திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் கண்டிப்பாக தற்கொலை செய்து கொள்வதாக வெண்பா பாரதியை மிரட்டிக் கொண்டே இருக்கிறார்.
இரண்டாவது திருமணதிற்கு ரெடியான பிரபல சீரியல் நடிகர் – அவரே வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!
Follow our Instagram for more Latest Updates
இறுதியாக டெஸ்ட் ரிசல்ட் வந்து அதில், ஹேமாவும், லக்ஷ்மியும் பாரதியின் குழந்தைகள் தான் என்ற உண்மை தெரிய வருகிறது. இதனால், அடுத்து வெண்பா மிரட்டும் போது நீ செத்தா எனக்கென்ன. எனக்கு என் குழந்தைகளும், கண்ணம்மாவும் தான் முக்கியம் என்று வெண்பாவை எதிர்க்கிறார். இதனால் தொடரின் அடுத்தகட்டம் மிகவும் விறுவிறுப்பாக செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.