தமிழக அரசு சார்பில் ஆன்லைன் மூலம் சாதி சான்றிதழ் – நீதிமன்றத்தில் விளக்கம்!
தமிழகத்தில் பழங்குடி இனத்தை சேர்ந்த மக்களுக்கு இனி ஆன்லைன் வழியாக சாதி சான்றிதழ் வழங்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குக்கு தமிழக அரசு தகவல் அளித்துள்ளது.
சாதி சான்றிதழ்
நாடு முழுவதும் தற்போது அனைத்து வகையான சேவைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சாதாரண பில் செலுத்துவது துவங்கி வங்கிகளில் பண பரிமாற்றம் செய்வது வரையும் அனைத்து சேவைகளும் ஆன்லைனில் நடைபெற்று வருகிறது. இது தவிர அரசின் சில சேவைகளும் ஆன்லைன் வழியாகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – மோசடி கும்பல் எச்சரிக்கை!
அந்த வகையில் சாதி சான்றிதழ், வருமான வரி சான்றிதழ், அரசு வேலைக்கான விண்ணப்ப பதிவு போன்ற அனைத்தும் ஆன்லைனில் நடத்தப்படுகிறது. இந்நிலையில் பழங்குடியின மக்களுக்கு தமிழக அரசு வழங்கும் சாதி சான்றிதழ் இனி ஆன்லைனில் கொடுக்கப்படும் என தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. அதாவது தமிழகத்தில் கடந்த 2015ம் ஆண்டு ஆட்சியில் இருந்த அரசு பழங்குடியின மக்களுக்கு ஆன்லைன் வழியாக சாதி சான்றிதழ் வழங்கக்கூடாது என உத்தரவிட்டிருந்தது.
TCS நிறுவனத்தில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு – தகுதி, பணியிடங்கள் & விண்ணப்ப பதிவு!
ஆனால் இந்த அறிவிப்புக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ‘தமிழகத்தில் வசித்து வரும் பழங்குடியின மக்களுக்கும் இனி ஆன்லைன் வாயிலாகவே சாதி சான்றிதழ் வழங்கப்படும்’ என தமிழக அரசு தகவல் அளித்துள்ளது.