திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – மோசடி கும்பல் எச்சரிக்கை!

0
திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு - மோசடி கும்பல் எச்சரிக்கை!
திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு - மோசடி கும்பல் எச்சரிக்கை!
திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – மோசடி கும்பல் எச்சரிக்கை!

ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் தற்போது புரட்டாசி மாதம் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. அதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு மோசடி செய்ததாக 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி கோவில்:

ஆண்டுதோறும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக வரும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இலவச தரிசன டோக்கன்கள், ஆன்லைன் வாயிலாக ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்கள், விஐபிகளுக்கும், அவர்களின் பரிந்துரை கடிதங்களின் மூலமும் சிறப்பு தரிசனம், விவிஐபி தரிசனம் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டு வந்தன. மேலும் கல்யாண உற்சவம், ஸ்ரீவானி அறக்கட்டளை உள்ளிட்டவை மூலமும் பிரத்யேகமாக டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

UIDAI புதிய ஆதார் கார்டை பெறும் எளிய வழிமுறைகள் இதோ!

இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பரவல் கணிசமாக குறைந்துள்ளதால் அதிகமாக மக்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். தற்போது தினசரி பக்தர்களின் வருகை 30 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. தினசரி 8 ஆயிரம் பேர் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து வருகின்றனர். இதேபோல் 8 ஆயிரம் பேருக்கு சர்வ தரிசன டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. மேலும் சிபாரிசின் பேரில் 300 ரூபாய் டிக்கெட்களை பெற்று சுமார் 6 ஆயிரம் பேர் ‘சுபதம்’ வழியாக விரைவாக தரிசனம் செய்து வருகின்றனர். வெறும் அரை மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்து விடலாம். இந்த டிக்கெட்களை வாங்குவதில் பக்தர்கள் பலரும் மிகுந்த ஆர்வம் காட்டி கொண்டிருக்கின்றனர். இவை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு தலைவர் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சிபாரிசின் மூலம் வழங்கப்படுகின்றன.

TCS நிறுவனத்தில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு – தகுதி, பணியிடங்கள் & விண்ணப்ப பதிவு!

இந்நிலையில் தற்போது புரட்டாசி மாசம் என்பதால் பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கிறது. இதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு, கள்ளச்சந்தையில் டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்பனை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்து தேவஸ்தானத்திற்கு புகார் வந்ததை அடுத்து, கண்காணிப்பை தீவிரப்படுத்தியது. அதன்படி கடந்த 23ஆம் தேதி வெளியூரில் இருந்து வந்த பக்தர்களுக்கு 300 ரூபாய் டிக்கெட்டை ஒரு டிக்கெட் 5 ஆயிரம் ரூபாய் வீதம் 7 டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. தேவஸ்தான ஊழியர் மூலமாக வங்கி ஊழியர் ஒருவர் 35 ஆயிரம் ரூபாய்க்கு தரிசன டிக்கெட்களை விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. அதனால் காவல்துறையினர் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த மோசடியில் பலர் சிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!