லோக்சபா தேர்தலை முன்னிட்டு கம்யூனிஸ்ட் கட்சியானது தனது தேர்தல் அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் 100 நாள் வேலை திட்டத்தின் தினக்கூலி ரூ.700 ஆக உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினக்கூலி உயர்வு:
இந்திய முழுவதும் வருகின்ற ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ம் தேதி வரை நடத்தப்பட உள்ள லோக்சபா தேர்தலை முன்னிட்டு அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதாவது வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு தேர்தலுக்கான பிரசாரங்கள் துவங்கப்பட்டு விட்டது. எனவே அரசியில் கட்சிகள் ஒவ்வொன்றும் தங்களது தேர்தல் அறிக்கைகளை தொடர்ச்சியாக வெளியிட்டு கொண்டே இருக்கிறது. இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியானது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க தடை – காரணம் இது தான்!
இதனை அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா டெல்லியில் இன்று வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் கிராமப்புற மக்களுக்கான 100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தினக்கூலியானது ரூ.700 ஆக உயர்த்தப்படும். சமூகநல மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகளை பெற ஆதார் கட்டாயம் என்ற முறை மாற்றப்படும். புதுவை மற்றும் டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும். சிஏஏ தேர்வு ரத்து செய்யப்படும் என்னும் வாக்குறுதிகள் இடம்பெற்று இருந்து குறிப்பிடத்தக்கது.