ஆதார் எண் மூலம் வங்கி கணக்கில் பணம் எடுக்க முடியுமா? ஆணையம் விளக்கம்!
மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ள ஆதார் எண்ணானது, தற்பொழுது வங்கி கணக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளதால் இதனால் பண மோசடி ஏற்படுமா என்பது குறித்த கேள்விகளுக்கு, தற்போது விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆதார் இணைப்பு
பொதுவாக ஒருவர் புதிய சிம் கார்டுகள் வாங்குவது முதற்கொண்டு வங்கி கணக்கு திறப்பது வரையிலும் ஆதார் அட்டைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தனித்துவ அடையாள ஆவணமாக கொடுக்கப்பட்டுள்ள ஆதார் அட்டைகள் பல விதமான சேவைகளுக்கு பயன்படுவதால் இதன் மூலம் ஏதேனும் மோசடி ஏற்படுமா என்ற கேள்விகள் மக்களிடையே பரவலாக எழுந்துள்ளது. அதிலும் குறிப்பாக ஆதார் அட்டைகள் வங்கி கணக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளதால், பண மோசடி தொடர்பாக மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அரபு நாடுகளில் பணிபுரியும் இந்தியர்களின் ஊதிய உயர்வு – அரசு பரிந்துரை!
இது குறித்த விளக்கத்தை ஆதார் ஆணையம் தற்போது விரிவாக கொடுத்துள்ளது. அதன் படி, ‘பொது மக்கள் தங்களது வங்கி கணக்குடன் ஆதார் மற்றும் பான் எண்ணை இணைத்திருப்பது குறித்து அச்சப்பட தேவையில்லை. இந்த ஆதார் எண், வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளதால், பண மோசடி ஏற்படும் என கூறப்படுவது போலியான கருத்துக்களாகும். பொதுமக்கள் இதை நம்ப வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அலகுத்தேர்வு அட்டவணை வெளியீடு!
வங்கி கணக்கு, ஆதார் எண்ணை மட்டுமே வைத்து உங்கள் பணத்தை மோசடி செய்ய முடியாது’ என குறிப்பிட்டுள்ளது. அதாவது ATM கார்டுகளை மட்டுமே வைத்து எப்படி மோசடி செய்ய முடியாதோ, அந்த வகையில் ஆதார் எண்ணை மட்டுமே வைத்தும் மோசடி செயல்களில் ஈடுபட முடியாது என்பதை பயனர்கள் நினைவில் கொள்ள வேண்டும். மேலும் ஆதார் அட்டையை வைத்து ஒரு மூன்றாம் நபர், உங்கள் வங்கி கணக்கை கூட முடக்க முடியாது எனவும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
எப்போது சிம் கார்டு வங்கிக்கணக்கு ஆதார் கட்டாயம் ஆனது ஏன் இப்படி பொய்யான தகவல்களை மட்டும் எப்படி இணையத்தில் தவறான கருத்து தெரிவித்தார்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்