அரபு நாடுகளில் பணிபுரியும் இந்தியர்களின் ஊதிய உயர்வு – அரசு பரிந்துரை!
வளைகுடா பகுதியில் உள்ள ஆறு அரபு நாடுகளில் பணிபுரியும் இந்திய தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த வேண்டும் என மத்திய அரசு அந்நாட்டு அரசுகளுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதனால் புலம்பெயர் தொழிலாளர்கள் பயனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தொழிலாளர்கள்:
இந்தியாவிலிருந்து ஏராளமான தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு சென்று வேலை பார்க்கின்றனர். தாயகத்தில் பணி கிடைக்காததாலும், வெளிநாடுகளில் அதிக ஊதியம் பெறலாம் என்பதற்காகவும் வெளிநாடுகளுக்கு சென்று பணி செய்கின்றனர். தனது குடும்பங்களை கவனித்து கொள்ளளவும், பொருளாதார ரீதியாக உதவும் வகையிலும் பெரும்பாலும் இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு பணி செய்ய செல்கின்றனர். வெளிநாடுகளில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை பெற்று தரும் முகவர்கள் மூலம் 3 அல்லது 5 வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் நியமனம் செய்யப்டுகின்றனர்.
ஆகஸ்ட் 1 முதல் ஜனாதிபதி மாளிகை, அருங்காட்சியகம் திறப்பு – நேர கட்டுப்பாடுகள்!
தற்போது கொரோனா பேரிடர் காரணமாக வெளிநாடுகளில் பணிபுரியும் இந்திய தொழிலாளர்கள் வேலை இல்லாத காரணத்தாலும், கொரோனா அச்சத்தாலும் தாயகம் திரும்பினர். பெரும்பாலும் வெளிநாடுகளுக்கு கட்டட, மின்னணு பணிகள், உற்பத்தி நிறுவனங்களுக்கு பணிக்கு செல்கின்றனர். கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதர வீழ்ச்சியால் கடந்த செப்டம்பர் மாதம் முதல் புலம் பெயர்ந்த இந்திய தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை குறைத்து மத்திய அரசு பரிந்துரை செய்தது. இதனால் இந்தியர்கள் வேலையிழப்பு தவிர்க்கப்படும் என கூறப்பட்டது.
தமிழக அரசுத்துறையில் 2.50 காலிப்பணியிடங்கள், ஓய்வு வயது குறைப்பு – அடுத்த நடவடிக்கை என்ன?
அனைத்து நாடுகளிலும் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருவதால் நாட்டின் இயல்பு நிலை திரும்பியுள்ளது. அதனால் தற்போது மீண்டும் புலம்பெயர்ந்த இந்திய தொழிலாளர்கள் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை கலந்தாலோசித்த மத்திய அரசு வளைகுடா பகுதியில் உள்ள ஆறு அரபு நாடுகளில் பணிபுரியும் இந்திய தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த வேண்டும் என மத்திய அரசு, அந்நாட்டு அரசுகளுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதன் மூலம் 88 லட்சம் இந்தியர்கள் பயன் பெறுவார்கள் என்றும் கூறியுள்ளது.