ஜூலை 19ம் தேதி முதல் கல்லூரிகள் திறப்பு? கர்நாடகா அரசு ஆலோசனை!

0
ஜூலை 19ம் தேதி முதல் கல்லூரிகள் திறப்பு? கர்நாடகா அரசு ஆலோசனை!
ஜூலை 19ம் தேதி முதல் கல்லூரிகள் திறப்பு? கர்நாடகா அரசு ஆலோசனை!
ஜூலை 19ம் தேதி முதல் கல்லூரிகள் திறப்பு? கர்நாடகா அரசு ஆலோசனை!

கர்நாடகா மாநிலத்தில் கொரோனா 2 ம் அலை பரவல் குறைந்துள்ளதால் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஜூலை 19 ஆம் தேதி முதல் கல்லூரிகளை திறக்க அரசு ஆலோசித்து வருகிறது.

கல்லூரிகள் திறப்பு

கர்நாடகாவில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளாக விதிக்கப்பட்டு இருந்த முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து தற்போது தளர்வுகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் இறுதி கட்டமாக மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரிகளை ஜூலை 19 ஆம் தேதி முதல் திறக்க அரசு ஆலோசித்து வருகிறது. கர்நாடகாவில் இதுவரை 64% மாணவர்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணிபுரியும் 85% ஊழியர்கள் இதுவரை ஒரு டோஸ் தடுப்பூசிகளை பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் அடுத்தகட்ட ஊரடங்கு தளர்வுகள் என்னென்ன? வெளியான தகவல்!

அதே நேரத்தில் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் துவங்கினால், அதில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு கட்டாயம் தடுப்பூசிகளை செலுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது. முதலாவதாக ஆன்லைன் வகுப்புகளை மேற்கொள்ள முடியாத மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு ஜூலை 19 ம் தேதி முதல் நேரடி வகுப்புகளை துவங்க ஆயத்த பணிகளை மேற்கொள்வது குறித்து முதலமைச்சர் எடியூரப்பா அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் சில கல்லூரிகளில் 100% மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளன. அதனால் அம்மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை நடத்துவதற்கான உத்தரவை பிறப்பிக்க அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் கர்நாடகா மாநில துணை முதல்வர் சி.என்.அஸ்வத் நாராயணா, கல்லூரிகளில் பட்டப்படிப்பு வகுப்புகளை மீண்டும் திறக்க எந்த தேதியும் முடிவு செய்யப்படவில்லை என்றும் அனைத்து தரப்பினருடனும் கலந்தாலோசித்த பின்னர் கல்லூரிகளை துவங்கும் தேதிகள் மற்றும் வகுப்புகள் குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

TN Job “FB  Group” Join Now

மாநிலம் முழுவதும் உள்ள 4,90,799 மாணவர்களில் 3,13,898 மாணவர்களுக்கும், ஊழியர்களில் 29,241 பேரில் 24,875 பேருக்கும் இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதற்கிடையில், பெங்களூர் பல்கலைக்கழகத்தில் 76.4% மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பெங்களூரு பல்கலைக்கழகத்தின் விஸ்வேஸ்வரய பொறியியல் கல்லூரியில் 79% மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கும், பல்கலைக்கழக சட்டக் கல்லூரியில் 78.3% பேருக்கும், பல்கலைக்கழக உடற்கல்வி கல்லூரியில் 71.6% பேருக்கும் தடுப்பூசி போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!