தமிழகத்தில் அடுத்தகட்ட ஊரடங்கு தளர்வுகள் என்னென்ன? வெளியான தகவல்!
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு நடவடிக்கைகள் ஜூலை 12 காலை உடன் முடிவடைய உள்ள நிலையில் அதற்கு பின் வழங்கப்படும் தளர்வுகள் குறித்து முதல்வர் ஆலோசனை நடத்திய பின்னர் அறிவிப்பார் என கூறப்படும் நிலையில், தளர்வுகள் குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. தினசரி கொரோனா பாதிப்பு 37 ஆயிரத்தை நெருங்கியது. நிலைமையை சரி செய்ய அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. அதன்படி மே 10 வரை தளர்வுகளின்றி முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. அதன் விளைவாக கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தது. பிறகு பல தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் – அமைச்சர் தகவல்!
கடைசியாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரி தளர்வுகள் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது வரை மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவை, மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்து, திரையரங்குகள், அனைத்து மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள், பொதுமக்கள் கலந்து கொள்ளும் சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்கள், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள், பள்ளி மற்றும் கல்லூரிகள், உயிரியல் பூங்காக்கள் போன்றவற்றிற்கு தடை தொடர்கிறது.
ஜியோவின் (Jio) புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் – அன்லிமிடெட் கால்ஸ் உடன் இலவச சலுகைகள்!
இந்நிலையில் ஜூலை 12க்கு பின்னர் எந்தெந்த துறைகளுக்கு தளர்வுகள் வழங்கப்படலாம் என சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. ஏற்கனவே திரையரங்குகளை திறக்கக்கோரி கோரிக்கைகள் வைக்கப்பட்டு வரும் நிலையில் 50 சதவிகித பார்வையாளர்களுடன் திரையரங்குகள் திறக்கப்படலாம். மேலும் தமிழகத்தில் அனைத்து கடைகளும் இரவு 8 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நேரம் மேலும் நீட்டிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள், டீ கடைகளில் வாடிக்கையாளர்கள் ஒரே நேரத்தில் 75 சதவீதம் பேர் வருகை தர அனுமதி வழங்கப்படலாம்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,393 பேருக்கு கொரோனா – 911 பேர் பலி!
தனியார் தொழில் நிறுவனங்கள் 100% ஊழியர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்படலாம். மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளது. அதன்படி ஆகஸ்ட் மாதம் கல்லூரிகள் திறக்க வாய்ப்புள்ளது. அதன் பின்னர் படிப்படியாக உயர்நிலை வகுப்புகளில் இருந்து பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வந்துள்ளது. இது குறித்து மருத்துவ குழுவுடன் ஆலோசனை நடத்திய பின்னர் முதல்வர் அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.