பிப்.7 முதல் கல்லூரிகள், பிப். 14 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – மாநில அரசு உத்தரவு!
கேரளா மாநிலத்தில் முன்னதாக கொரோனா பாதிப்புகள் அதிக அளவில் பதிவு செய்யப்பட்டு வந்த காரணத்தால் பள்ளி, கல்லூரிகளில் விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது நோய் தொற்று பாதிப்பு குறைந்து விட்டதால் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ளது.
அரசு உத்தரவு:
கேரளா மாநிலத்தில் தான் கொரோனா தொற்றின் 2ம் அலை பரவல் நாட்டிலேயே அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது. மாநில அரசின் முழுமுயற்சியும் அளித்தும் நோய் பரவலை கட்டுப்படுத்த முடியாத நிலை நீடித்ததால் மத்திய அரசின் சுகாதாரத்துறையினரின் குழு மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த உதவியது. அதன்பிறகு தான் கேரளாவில் கொரோனாவின் 2ம் அலை தாக்குதல் குறைந்தது.
TN Job “FB Group” Join Now
கொரோனா பாதிப்புகள் குறைந்து இயல்பு நிலை திரும்பியதால் சமீபத்தில் தான் கேரளாவில் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் கொரோனாவின் 3ம் அலை பரவல் வந்து பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கியதால் மாநிலத்தில் 1உள்ள பள்ளிகளை ஜனவரி 21 முதல் மூட உத்தரவிடப்பட்டது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பு வழக்குகள் குறையத் தொடங்கிய பின்னர் பள்ளிகளை மீண்டும் திறக்க கோவிட் மறுஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்துள்ளது.
‘குக் வித் கோமாளி’ சீசன் 3ல் இருந்து விலகிய ஷிவாங்கி? வெளியான ஷாக்கிங் தகவல்!
அதன்படி, மாநிலத்தில் வரும் பிப்ரவரி 7ம் தேதி முதல் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்படுவதாகவும், பிப்ரவரி 14ம் தேதி முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படுவதாகவும் அரசு அறிவித்துள்ளது. முன்னதாக அரசு அறிவித்திருந்த அனைத்து கொரோனா நோய் தடுப்பு விதிமுறைகளும் முறையாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும் கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.