அண்ணா பல்கலை இன்ஜினியரிங் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – செமஸ்டர் தேர்வு தேதி வெளியீடு!

0
அண்ணா பல்கலை இன்ஜினியரிங் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - செமஸ்டர் தேர்வு தேதி வெளியீடு!
அண்ணா பல்கலை இன்ஜினியரிங் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - செமஸ்டர் தேர்வு தேதி வெளியீடு!
அண்ணா பல்கலை இன்ஜினியரிங் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – செமஸ்டர் தேர்வு தேதி வெளியீடு!

தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் பிப்ரவரி 1ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிப்பு வெளியானது. இதன் அடிப்படையில் நடத்தப்படும் ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகளுக்கு பின் பொறியியல் கல்லூரிகள் வரும் மார்ச் 7ம் தேதி திறக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

பொறியியல் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு:

தமிழகத்தில் நடப்பு ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் கொரோனா 3வது அலை தொடங்கிய நிலையில் மீண்டும் கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் பிப் 1 முதல் பள்ளி கல்லூரிகள் திறக்க அனுமதி அளித்து அரசாணை வெளியானது. இந்த நிலையில் அரசு கலைக் கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகள் பிப்ரவரி 1-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடத்தப்படும்.மேலும் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டுமே நேரடியாக தேர்வு நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியானது.

தமிழகத்தில் 4 நாட்கள் மதுபான கடைகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

இந்த வகையில் மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் நடத்திய பாடங்கள் அடிப்படையில் தேர்வுக்கான வினாத்தாள் தயாரிக்கப்படும். எந்தவித முறைகேடுகளும் நடக்காத வண்ணம் ஆன்லைனில் தேர்வை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் கல்லூரி தேர்வுகள் குறித்து அமைச்சர் பொன்முடி கூறியது, கொரோனா தாக்கம் காரணமாகவும் கல்லூரி செமஸ்டர் தேர்வு ஆன்லைன் முறையில் நடப்பதாகவும், கல்வித்தரத்தை பொறுத்தவரை சமரசமின்றி உயர்கல்வித்துறை செயல்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

சென்னை: அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

இதனை தொடர்ந்து கொரோனா காலகட்டத்தில் படித்து முடித்த, திறமை வாய்ந்த மாணவர்களுக்கும் “கொரோனா பேட்ச்” என்று கூறி வேலை தருவதற்கு பல்வேறு நிறுவனங்கள் மறுப்பதாக, தனக்கு வரும் புகார்களின் அடிப்படையிலேயே இறுதியாண்டு மாணவர்களுக்கு நேரடி தேர்வு நடத்த முடிவு செய்திருப்பதாக அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார். இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம், பிப் 1 முதல் தொடங்கப்பட்டுள்ள ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகள் முடிந்த பிறகு பொறியியல் கல்லூரிகள் வரும் மார்ச் 7ம் தேதி திறக்கப்படும் என்று அறிவித்துள்ளது.மேலும் 2, 3 மற்றும் 4-ம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் மார்ச் 7 முதல் ஜூன் 11 வரை நடைபெறும் என்றும் ஜூன் 22 -ம் தேதி முதல் நடப்பு செமஸ்டருக்கான எழுத்துத் தேர்வு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!