மார்ச் 1ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

0
மார்ச் 1ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறப்பு - மாநில அரசு அறிவிப்பு!!
மார்ச் 1ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறப்பு - மாநில அரசு அறிவிப்பு!!

மார்ச் 1ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

மிசோரம் மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த கல்லூரிகள் வரும் மார்ச் மாதம் 1ம் தேதி முதல் மீண்டும் துவங்கவுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

கல்லூரிகள் திறப்பு:

நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரி என அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு மாநிலங்களிலும் கொரோனா பரவல் குறைந்து வருவதால் பள்ளி கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மிசோரம் மாநிலத்தில் வரும் மார்ச் மாதம் 1ம் தேதி முதல் அதாவது வரும் திங்கள்கிழமை முதல் கல்லூரிகள் மற்றும் மற்ற உயர்கல்வி நிறுவனங்கள் திறக்கப்படவுள்ளன.

குடிசை மாற்று பணிக்கான நேர்முக தேர்வு தள்ளிவைப்பு – ஏமாற்றமடைந்த தேர்வர்கள்!!

இது குறித்த அறிவிப்பை தற்போது மிசோரம் மாநில அரசு இன்று வெளியிட்டுள்ளது. கல்லூரிகள் திறப்பது குறித்து மிசோரம் மாநிலத்தின் உயர் மற்றும் தொழிற்கல்வித்துறை அமைச்சர் தலைமையில், கல்வி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் ஒன்று நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்தில் மார்ச் 1ஆம் தேதி முதல் கல்லூரிகளை திறக்கலாம் என முடிவு எடுக்கப்பட்டது. அதே நேரத்தில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், தேவையான முன்னேற்பாடுகளை ஏற்படுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!