குடிசை மாற்று பணிக்கான நேர்முக தேர்வு தள்ளிவைப்பு – ஏமாற்றமடைந்த தேர்வர்கள்!!
இன்று நடைபெறவிருந்த குடிசை மாற்று வாரியம் தேர்வு தள்ளி வைக்கப்பட்டுளாதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
குடிசை மாற்று பணி:
கடலூரில் குடிசை மாற்று வாரிய உதவியாளர் பணிக்கான நேர்முக தேர்வு இன்று நடைபெறுவதாக இருந்த நிலையில் மறு தேதி குறிப்பிடப்படாமல் தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வுக்கு வந்தவர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர். தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் எந்த அரசு பணிக்கும் தேர்வு நடத்த கூடாது என்ற தேர்தல் நடத்தை விதிமுறைகளையொட்டி இந்த நேர்முக தேர்வு தள்ளி வைக்கப்பட்டுளாதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு – வெளியான முடிவுகள்!!
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தற்போது தேதி கூறாமல் தேர்வை ஒத்திவைத்துள்ளதால் அனைவரும் சற்று குழம்பி போய் உள்ளனர். முன்னதாக இதுகுறித்து தகவல்கள் தெரிவிக்கப்படாத காரணத்தினால் வெகு தூரத்திலிருந்து தேர்வுக்கு வந்திருந்த தேர்வர்கள் பெரிதும் ஏமாற்றம் மற்றும் துன்பத்திற்கு உள்ளாகியுள்ளனர்.