தமிழகத்தில் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை – எந்தெந்த இடங்களில் தெரியுமா? கலெக்டரின் அறிவிப்பு!
சென்னையில் வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண மையங்களாக செயல்படும் அரசு பள்ளிகளுக்கு திங்கட்கிழமை (15.11.2021) விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
விடுமுறை அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததையடுத்து மக்கள் மீண்டும் இயல்பு நிலை நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வார காலமாக கனமழை கொட்டித் தீர்த்து வருவதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் உள்ளனர். தலைநகர் சென்னை வெள்ளக்காடாக மாறியுள்ளது. இடைவிடாது பெய்து வரும் கனமழையால் ஏரி, குளங்கள் நிரம்பி தண்ணீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு – விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் தள்ளிவைப்பு?
மேலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் மக்கள் குடியிருக்கும் வீடுகளில் புகுந்ததால் மக்கள் தங்களின் உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர். அவர்களை பத்திரமாக மீட்டெடுக்க பேரிடர் பாதுகாப்பு படையினர் படகுகள் மூலம் சிறுவர்கள், குழந்தைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்கின்றனர். வெள்ள நீர் வடியும் வரை பாதிக்கப்பட்ட மக்கள் அரசு பள்ளிகளில் தங்க வைக்க அரசு முன்னேற்பாடுகளை செய்துள்ளது. அரசு பள்ளிகள் வெள்ள நிவாரண மையங்களாக செயல்பட்டு வருகின்றன.
TCS நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – முடிவுக்கு வரும் WFH! முக்கிய அறிவிப்பு வெளியீடு!
ஏற்கனவே சென்னையில் தொடர் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது சென்னையில் மழை குறைந்துள்ளதால் இன்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வெள்ள நிவாரண மையங்களாக செயல்படும் அரசு பள்ளிகளுக்கு மட்டும் இன்று (15.112021) விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் மற்ற பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.