தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு – விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் தள்ளிவைப்பு?
தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர் விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடைபெற இருந்த நிலையில் அதனை அடுத்த ஆண்டிற்கு ஒத்தி வைக்கலாமா? என ஆலோசனை பள்ளிக்கல்வித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆசிரியர் இடமாறுதல்:
தமிழகத்தில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் நான்கு லட்சத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் விருப்பமான இடங்களுக்கு மாறுதல் பெறுவதற்கான கவுன்சிலிங் நடத்தப்படும். தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
TCS நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – முடிவுக்கு வரும் WFH! முக்கிய அறிவிப்பு வெளியீடு!
அதிகளவு கூட்டம் கூடுவதால் கொரோனா பரவும் வாய்ப்பு அதிகமாக இருந்த காரணத்தால் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படவில்லை. தற்போது கொரோனா தாக்கம் குறைந்துள்ளதால் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்த திட்டமிடப்பட்டன. இருப்பினும் இடமாறுதல் கவுன்சிலிங்கை அடுத்த ஆண்டுக்கு மாற்றலாமா என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தற்போது பள்ளிகள் கால தாமதமாக திறக்கப்பட்டுள்ள காரணத்தால் ஆசிரியர்களுக்கு வேலைப்பளு அதிகமாகியுள்ளது.
தஞ்சாவூரில் நாளை (நவ.16) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
மாணவர்களின் கற்றல் ஆர்வம் குறைந்துள்ள காரணத்தால் பள்ளி நேரம் தவிர மற்ற நேரங்களில் மாணவர்களுக்கு டியூஷன் எடுக்கும் வகையில் இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது. கொரோனா விடுமுறையை தொடர்ந்து தற்போது கனமழை காரணமாக விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. பாடங்கள் நடத்தி முடிக்காமல் இருக்கும் நிலையில் ஆசிரியர்களுக்கு இடமாறுதல் அளிப்பது சரியானது அல்ல என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நெருங்கும் நேரத்தில் ஆசிரியர்களை மாற்றுவது சரியல்ல என்பதால் இடமாறுதல் கவுன்சிலிங்கை அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கலாமா என்று ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.