Cognizant நிறுவனத்தில் 30,000 பேருக்கு வேலைவாய்ப்பு – புதிய நிதியாண்டில் திட்டம்!
காக்னிசண்ட் நிறுவனம் 2021ம் ஆண்டில் தனது நிறுவனத்தில் 30,000 புதிய பட்டதாரிகளை பயிற்சி அளித்து பணி அமர்த்த உள்ளதாக செய்திகளை வெளியிட்டுள்ளது.
பணி நியமனம்:
காக்னிசண்ட் நிறுவனம் பெங்களூரில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பிரையன் ஹம்ப்ரிஸ் ஆய்வாளர்களுடன் ஒரு மாநாட்டு அழைப்பில் கலந்து கொண்டார். அங்கு தனது நிறுவனத்தின் கடந்த காலாண்டிற்கான அனைத்து விவரங்களையும் பற்றி அறிவித்தார். தொடர்ந்து வரும் காலங்களில் நிறுவனத்தின் மேம்பாட்டிற்கான முயற்சிகளையும் பற்றி தெரிவித்தார்.
தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – பயணிகள் கவனத்திற்கு!
ஆலோசனை கூட்டத்தில் அவர், நிறுவனத்தின் தற்போதைய நிலை இந்தியாவில் மிக மோசமான நிலையில் உள்ளதாகவும், நிறுவனத்தின் மூன்றில் இரண்டு பங்கு ஊழியர்கள் மட்டுமே உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், கடந்த 10 வருடங்களாக இந்தியாவில் அவர்களின் நிறுவனம் செயல்படுவதாகவும், அதிக பரபரப்பான வியாபாரங்கள் இங்கு தான் நடப்பதாகவும் தெரிவித்தார்.
TN Job “FB Group” Join Now
மேலும், இந்தியாவில் இளைய மற்றும் மூத்த வயதில் உள்ள ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வெளியேறுவதாகவும் இதனால் நிறுவனத்திற்கு அதிக ஊழியர்கள் தேவைப்படுவதாகவும் கூறினார். நிதியாண்டில் இரண்டாவது காலாண்டில் நிறுவனத்தின் வருடாந்திர வருவாய் 21% முதல் 31% ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவித்தார். மேலும், 2021 ஆம் ஆண்டில் ஏறத்தாழ 30,000 புதிய பட்டதாரிகளை நிறுவனத்தில் பணியமர்த்த இருப்பதாகவும், 2022 ம் ஆண்டில் 45,000 பேரை புதிதாக பணி நியமனம் செய்வதற்கும் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.