தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – பயணிகள் கவனத்திற்கு!
தெற்கு ரயில்வே நிர்வாகம் சென்னை மற்றும் செங்கோட்டை இடையிலான சிறப்பு ரயில் சேவையில் மாற்றங்களை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. மாற்றப்பட்ட விவரங்கள் குறித்த அறிவிப்புகளையும் ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
சிறப்பு ரயில் சேவை:
நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் நோய் தடுப்பு நடவடிக்கையாக பொதுப்போக்குவரத்து சேவைக்கு தடை விதித்தது. இதனால் பொது போக்குவரத்து சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டது. தற்போது மெல்ல தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில், பொது போக்குவரத்திற்கான கட்டுப்பாடுகளை அரசு நீக்கியுள்ளது.
ஆகஸ்ட் மாதம் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
முன்னதாக ஊரடங்கு காலத்தில் மக்களின் அவசர தேவைக்காக ரயில்கள் இயக்கப்பட்டது. அதிக அளவிலான ரயில்கள் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மேலும், அரசு குறிப்பிட்ட அளவிலான எண்ணிக்கையில் ரயில்களை இயங்க அனுமதித்து, பயணிகளின் வரத்து குறைந்ததால் மேலும், பல ரயில்கள் நிறுத்தப்பட்டது. கடந்த வாரம், சென்னை-செங்கோட்டை இடையே ஒவ்வொரு திங்கள்கிழமையிலும் சிறப்புக் கட்டண ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே சார்பாக அறிவிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இதனை தொடர்ந்து, தற்போது செங்கோட்டை – சென்னை எழும்பூர் வாரம் மும்முறை சிறப்பு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. செங்கோட்டையில் இருந்து சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் வியாழன், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் புறப்பட்டுச் செல்லும் என கூறியுள்ளது. மேலும், மறு வழித்தடத்தில் சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்கு புதன், வெள்ளி, சனிக்கிழமைகளில் புறப்பட்டு வந்துச் சேரும் என்றும் தெரிவித்துள்ளது.