தமிழகத்தில் மத்திய அரசு போட்டித்தேர்வுகளுகான பயிற்சி மையம் – அமைச்சர் வெளியிட்ட சூப்பர் தகவல்!
தமிழகத்தில் இருந்து மத்திய அரசு பணிகளின் போட்டித்தேர்வுகளுக்கு தயாராகுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது என்று அமைச்சர் உதயநிதி கூறியுள்ளார். இதனை சரி செய்ய தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
பயிற்சி மையம்:
தமிழகத்தில் உள்ள அரசு காலிப்பணியிடங்களுக்கு TNPSC தேர்வாணையம் மூலம் போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுகள் கடந்த 2020, 2021ம் ஆண்டுகளில் கொரோனா பரவல் காரணமாக நடைபெறவில்லை. அதன் பிறகு கடந்த ஆண்டு காலிப்பணியிடங்கள் அதிகரித்த நிலையில் அதனை பூர்த்தி செய்யும் விதமாக TNPSC தேர்வுகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.
Follow our Instagram for more Latest Updates
முதல் கட்டமாக மக்கள் அதிகம் எதிர்பார்த்த குரூப் 2, 2A, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகள் அடுத்தடுத்து நடைபெற்றது. இந்த தேர்வுகளின் கீழ் உள்ள குறைந்த காலிப்பணியிடங்களுக்கு லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்தனர். அதே நேரம் மத்திய அரசின் பணியிட தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது.
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு? முதலமைச்சர் ஆலோசனை!!
இது குறித்து பேசிய தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் தமிழ்நாட்டில் இருந்து மாணவர்கள் மத்திய அரசு தேர்வுகளுக்கு காட்டும் ஆர்வம் குறைவாக இருப்பது வேதனை அளிப்பதாக கூறியுள்ளார். இதனை சரி செய்ய மாவட்டம் தோறும் போட்டி தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த பயிற்சி மையங்களில் காலை, மாலை என இரு வேளைகளிலும் வகுப்புகள் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.