நகர கூட்டுறவு வங்கி உரிமம் ரத்து – இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

0
நகர கூட்டுறவு வங்கி உரிமம் ரத்து - இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
நகர கூட்டுறவு வங்கி உரிமம் ரத்து - இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
நகர கூட்டுறவு வங்கி உரிமம் ரத்து – இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

இந்திய ரிசர்வ் வங்கி மகாராஷ்டிராவை சேர்ந்த டாக்டர் சிவாஜிராவ் பாட்டீல் நிலங்கேக்கர் நகர கூட்டுறவு லிமிடெட் வங்கியின் உரிமத்தை ரத்து செய்வதாக நேற்று அறிவித்துள்ளது. இதனால் வங்கி வணிக சேவைகள் அனைத்தும் நிறுத்தப்படுகிறது.

உரிமம் ரத்து:

இந்திய ரிசர்வ் வங்கி லாத்தூர், நிலங்காவில் உள்ள டாக்டர் சிவாஜிராவ் பாட்டீல் நிலங்கேக்கர் நகர கூட்டுறவு லிமிடெட் வங்கியினை பற்றிய அறிவிப்பு ஒன்றை நேற்று அறிவித்தது. அதவாது, மகாராஷ்டிராவை தளமாகக் கொண்ட வங்கியின் தற்போதைய நிதி நிலையில் வங்கியினை தொடர்ந்து நடத்த இயலாது என்று கூறி டாக்டர் சிவாஜிராவ் பாட்டீல் நிலங்கேக்கர் நகர கூட்டுறவு லிமிடெட் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது.

தற்போதைக்கு பள்ளிகள் திறப்பு கிடையாது – டெல்லி முதல்வர் தகவல்!

வங்கியின் நிதி நிலைமை மோசமாக இருப்பதால் வங்கியில் வைப்பு தொகைதாரர்களுக்கு பணத்தை முழுமையாக செலுத்த முடியாது என்றும் தெரிவித்து உள்ளது. இதன் அடிப்படையிலேயே வங்கியின் உரிமம் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த றிவிப்பு நேற்று வெளியிடப்பட்ட நிலையில், நேற்றுடன் வங்கியின் வணிக பரிவர்த்தனைகள் அனைத்தும் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

1949 ஆம் ஆண்டு வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் உள்ள விதிகளுக்கு வங்கி இணங்கவில்லை என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும், மகாராஷ்டிராவின் ஆணையர் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், வங்கியை மூடுவதற்கான உத்தரவை பிறப்பித்தார். இந்த நிலையில் வங்கி பொது வணிகத்தில் ஈடுபடுவதற்கு அனுமதித்தால் பொது நலன் மிகவும் அதிகப்படும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!