தற்போதைக்கு பள்ளிகள் திறப்பு கிடையாது – டெல்லி முதல்வர் தகவல்!
நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகிறது. ஆனால் டெல்லி பள்ளிகளில் ஆஃப்லைன் வகுப்புகளை மீண்டும் தொடங்க எந்த திட்டமும் இல்லை என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் மாநில அரசுகள் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளன. இதன் காரணமாக கொரோனா பரவல் குறைந்து கொண்டே வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சத்திற்கு அதிகமாக பதிவாகி வந்த நிலையில் தற்போது 40 ஆயிரமாக குறைந்துள்ளது. இதனால் பல மாநிலங்களில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.
வருமானவரி தாக்கல் செய்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தபால் வழி சேவை!
அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு வந்துள்ளனர். மேலும் தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொரோனா மூன்றாம் அலை தாக்கம் பரவ வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, இருந்த போதிலும் ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கியுள்ளன.
TN Job “FB Group” Join Now
ஆனால் இது குறித்து டெல்லி அரசு கூறுகையில், டெல்லி பள்ளிகளில் ஆஃப்லைன் வகுப்புகளை மீண்டும் தொடங்க எந்த திட்டமும் இல்லை. எனவும் கொரோனா மூன்றாம் அலை தாக்கம் குழந்தைகளை தாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குழந்தைகளை ஆபத்தில் விடமாட்டோம் என முதல்வர் தெரிவித்துள்ளார். டெல்லியில் கடந்த 2 வாரங்களாக கொரோனா பாதிப்பு 100 க்கு கீழ் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து நாளை ஆலோசனை நடத்தப்பட உள்ளது.