வருமானவரி தாக்கல் செய்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தபால் வழி சேவை!
சேமிப்பு கணக்கு, குறைந்த வட்டியில் கடன்கள் உட்பட பல சேவைகளை இந்திய தபால் துறை வழங்குகிறது. அந்த வரிசையில் வருமான வரி செலுத்துபவர்களும் இனி தபால் மூலமாகவே தங்களது வரியை தாக்கல் செய்யலாம் என ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வருமான வரி தாக்கல்
வருமான வரி செலுத்துபவர்களுக்கான ஒரு சிறந்த அறிவிப்பை இந்திய தபால்துறை வெளியிட்டுள்ளது. அதாவது வங்கிகளை போலவே குறைந்த அளவு வட்டியுடன் கடன் திட்டம், சிறந்த சேமிப்பு கணக்கு, பெண்கள், முதியவர்களுக்கான சிறப்பு சேமிப்பு உள்ளிட்ட பல சேவைகளில் சிறந்த சலுகையை தபால்துறையும் அளித்து வருகிறது. இந்த வரிசையில் வருமான வரி செலுத்துபவர்களும் இனி தபால்துறைகள் மூலமாகவே செலுத்திக்கொள்ளலாம் என புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
8 வருடங்களாக +2 தேர்வெழுதும் சரஸ்வதி, வெறுப்பில் அப்பா – ‘தமிழும் சரஸ்வதியும்’ இன்றைய எபிசோட்!
அந்த வகையில் வருமான வரி செலுத்துபவர்கள் நீண்டதூரம் பயணம் செய்யும் தேவையின்றி அருகில் இருக்கும் தபால் அலுவலக பொதுச்சேவை மையத்தை அணுகி வருமான வரித் தாக்கல் செய்து கொள்ளலாம். இது தொடர்பாக இந்திய தபால் துறை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ‘வருமான வரித் தாக்கல் செய்பவர்கள் இனி நீண்ட தூரங்கள் பயணிக்க வேண்டியதில்லை. ஏனென்றால் உங்கள் அருகில் இருக்கும் தபால் துறை அலுவலங்கள் இத்தகைய சேவைகளை அளிக்கிறது’. என்று குறிப்பிட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இது தவிர தபால் சேவைகள், வங்கி மற்றும் இன்சூரன்ஸ் குறித்த சேவைகள், அரசு வழங்கும் திட்டங்கள், பயன்கள், சலுகைகள் குறித்த அனைத்து விதமான தகவல்களையும் தபால் அலுவலக பொதுச் சேவை மையம் வழங்குகிறது. இந்த அறிவிப்பின் கீழ் நாடு முழுவதும் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் இத்தகைய சேவைகளை ஒருவர் எளிதாக பெற்றுக்கொள்ள முடியும். சமீபத்தில் வருமான வரித்துறை www.incometax.gov.in என்ற புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தி வரி செலுத்துபவர்களுக்கான சேவைகளை எளிதாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.