CIBA நிறுவனத்தில் ரூ.35,000/- ஊதியத்தில் வேலை ரெடி..!
உவர்நீர் மீன் வளர்ப்பு மத்திய நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Young Professional II பணியிடம் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் கீழ்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Central Institute of Brackishwater Aquaculture (CIBA) |
பணியின் பெயர் | Young Professional II |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 15.04.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
உவர்நீர் மீன் வளர்ப்பு மத்திய நிறுவனம் பணியிடங்கள்:
உவர்நீர் மீன் வளர்ப்பு மத்திய நிறுவனத்தில் காலியாக உள்ள Young Professional II பணிக்கு என 1 இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகிறது.
Young Professional II கல்வி தகுதி:
விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் M.Sc in Microbiology, M.Sc in Biotechnology, M.F.Sc போன்ற Degree-களில் ஏதேனும் ஒன்றை முடித்தவராக இருப்பது அவசியம் ஆகும்.
Young Professional II அனுபவம்:
விண்ணப்பதாரர் Evaluation of Antimicrobial Resistance, Molecular Biology and Bioinformatics போன்ற பணி சார்ந்த பிரிவில் அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியம் ஆகும்.
Young Professional II வயது வரம்பு:
Young Professional II பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் பெண்ணாக இருந்தால் வயது வரம்பு 15.04.2022 அன்றைய நாள் கணக்கின்படி அதிகபட்சம் 40 வயது எனவும் ஆண்களாக இருந்தால் அதிகபட்சம் 35 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
CIBA ஊதியம்:
Young Professional II பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர் ரூ.35,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
CIBA தேர்வு முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
CIBA விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் அறிவிப்பின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பின் அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து நிறுவனத்தின் மின்னஞ்சல்([email protected]) முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை 15.04.2022 இறுதி நாட்களுக்குள் அனுப்ப வேண்டும்.