குழந்தைகளுக்கான ஆதார் கார்டு – UIDAI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

0
குழந்தைகளுக்கான ஆதார் கார்டு - UIDAI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
குழந்தைகளுக்கான ஆதார் கார்டு - UIDAI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
குழந்தைகளுக்கான ஆதார் கார்டு – UIDAI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

இந்தியாவில் பிறந்த குழந்தை முதல் அனைவருக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குழந்தைகளுக்கான ஆதார் கார்டு குறித்து முக்கிய அறிவிப்பை ஆதார் அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது.

ஆதார்:

இந்தியாவில் அடையாள ஆவணங்களில் ஒன்றாக விளங்கும் ஆதார் அட்டை அனைத்து வேலைகளுக்கும் பயன்படுகிறது. அதனால் தான் ஆதார் அமைச்சகம் எப்போதும் ஆதார் கார்டை அப்டேடாக வைத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தி வருகிறது. ஆதாரில் உள்ள பிறந்த தேதி, முகவரி, மொபைல் எண், புகைப்படம் போன்ற விவரங்களை சரியாக வைத்துக் கொள்வது அவசியம். தற்போது ஆதார் அப்டேட்களை ஆன்லைன் மூலமாக வீட்டில் இருந்தபடியே செய்யலாம்.

Follow our Instagram for more Latest Updates

நம் நாட்டில் குழந்தைகளுக்கு கூட ஆதார் கார்டு வழங்கப்படுகிறது. அதன்படி 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நீல நிறத்தில் பால் எனும் ஆதார் கார்டு வழங்கப்படும். இந்த ஆதாரை குழந்தைக்கு 5 மற்றும் 15 வயது ஆகும் போது புதுப்பிக்க வேண்டும் என்று ஆதார் அமைச்சகம் தற்போது தெரிவித்துள்ளது. ஏனெனில் குழந்தைக்கு 5 வயது ஆகும் போது தான் கருவிழி, கைரேகை உள்ளிட்ட பயோமெட்ரிக் விவரங்கள் ஆதாரில் சேர்க்கப்படும்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் சத்துணவு முட்டை – அதிரடி அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

அதனால் தான் ஐந்து வயதுக்கு பிறகு ஆதாரை புதுப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. அவ்வாறு புதுப்பிக்கப்படவில்லை என்றால் ஆதார் கார்டு செல்லுபடி ஆகாது. இந்த குழந்தைகளுக்கான ஆதாரை புதுப்பிக்க கட்டணம் ஏதும் வசூலிக்க விட மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!