அரசு பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் சத்துணவு முட்டை – அதிரடி அறிவிப்பு!

0
அரசு பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் சத்துணவு முட்டை - அதிரடி அறிவிப்பு!
அரசு பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் சத்துணவு முட்டை - அதிரடி அறிவிப்பு!
அரசு பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் சத்துணவு முட்டை – அதிரடி அறிவிப்பு!

கல்வித்துறை சார்பில் புதுச்சேரியில் இயங்கி வரும் பள்ளிகளில் முன்னதாக வழங்கப்பட்ட சத்துணவு முட்டை திட்டம் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் சத்துணவு முட்டை வழங்கப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

சத்துணவு முட்டை:

புதுச்சேரி அரசின் கல்வித்துறை சார்பில் 2017ம் ஆண்டு முதல் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பாலுடன் ஊட்டச்சத்து மாவு கலந்து வழங்கப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக இந்த திட்டம் கைவிடப்பட்டது. அது மட்டுமில்லாமல் சத்துணவு முட்டை வழங்குவதும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அரசு பள்ளியில் படிக்கும் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சத்துணவு முட்டை வழங்கப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 17,000 பேர் தங்கும் பிரமாண்ட அறைகள் ஏற்பாடு!

Exams Daily Mobile App Download

முதற்கட்டமாக 293 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, வாரம் 2 முட்டை வீதம், சுழற்சி முறையில் அனைத்து பள்ளிகளுக்கும் வாரம் ஒரு லட்சம் சத்துணவு முட்டை விநியோகம் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி பள்ளிகளில் புதிய கல்விக் கொள்கை தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டம் போல, புதுச்சேரி பள்ளிகளில் மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் தனியார் பங்களிப்புடன் காலை சத்துணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என ஆளுநர் தமிழிசை அவர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!