பள்ளி வளாகத்தில் குழந்தைகள் நல காப்பகம் அமைக்க தடை? மேலும் தகவல் அளிக்க அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு!
நாகர்கோவில் எஸ் எல் பி பெண்கள் பள்ளி மைதானத்தில் குழந்தைகள் நல காப்பகம் மற்றும் அலுவலகம் கட்டுவதற்கு தடை விதிக்க கோரி மனு ஒன்று மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு மதுரை ஐகோர்ட் அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது பற்றி விரிவாக பார்ப்போம்.
குழந்தைகள் நல காப்பகம்
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக தொடக்கக் கல்வி மாணவர்களுக்கிடையே கற்றல் இடைவெளியை சரி செய்வதற்காக ‘எண்ணும் எழுதும்’ திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று மாணவர்களுக்கு பயன்படும் வகையில் பல்வேறு வகையான நலத்திட்டங்களை தமிழக பள்ளி கல்வித்துறை செயல்படுத்தி வருகிறது.
Follow our Instagram for more Latest Updates
அந்த வகையில் 12 வயதுக்குட்பட்ட மாணவர்களின் உடல்நலம் மற்றும் மனநலம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கென குழந்தைகள் நல காப்பகம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாகர்கோவில் எஸ்எல்பி பெண்கள் பள்ளி மைதானத்தில் குழந்தைகள் நல காப்பகம் மற்றும் அலுவலகம் கட்டுவதற்கு தடை கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த மனுவில் பள்ளி வளாகத்திலேயே குழந்தைகள் நல காப்பகம் அமைப்பதனால் மாணவர்களின் கல்வியும் உடற்கல்வியும் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த வழக்கு விசாரணையின் போது, பள்ளி மைதானத்தை தவிர்த்து வேறு இடங்களில் குழந்தைகள் நல காப்பகம் மற்றும் அலுவலகம் அமைக்க முடியாதா? என மதுரை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு தரப்பில் தகவல் பெற்று தெரிவிக்க வேண்டும் எனவும் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன் இந்த வழக்கு விசாரணையை 1 வாரத்திற்கு தள்ளி வைப்பதாகவும் மதுரை ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.