தமிழகம் முழுவதும் பள்ளிகள் மூடல் எதிரொலி – குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை உயர்வு!
ஆண்டுதோறும் ஜூன் 12 சர்வதேச குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு:
சர்வதேச தொழிலாளர் அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் ஜூன் 12 குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினம் கொண்டாட முக்கிய காரணமாக குழந்தை தொழிலாளர்கள் கஷ்டங்களை தெரியப்படுத்தல், முதலாளிகள், பணியாளர்கள், அமைப்புகளை ஒருங்கிணைத்து குழந்தை தொழிலாளர்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
பழைய 50 பைசா நாணயத்திற்கு ரூ.1 லட்சம் – தவறாமல் படிங்க!
இதன் காரணமாக குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைந்தது. ஆனால் கொரோனா பரவல் தொடங்கியது காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட சைல்டு லைன் இயக்குனர் கருப்பசாமி கூறுகையில், 2021 ஆம் ஆண்டு முதல் உலக குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு தினத்தை ஜ.நா., சபை ஆண்டு முழுவதும் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு ஆண்டாக கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
15 முதல் 18 வயதிற்கு உட்பட்டவர்களை தீப்பெட்டி, பட்டாசு, கெமிக்கல், ஓட்டல்,பேக்கரி, ஒர்க்க்ஷாப் உள்ளிட்ட 52 வகையான அபாயகரமான தொழில்களில் ஈடுபடுவதை தடுக்கவும், அவ்வாறு ஈடுபடும் குழந்தைகளை மீட்டு அவர்களை பணியில் அமர்த்தியவர்களுக்கு அபராதம், சிறை தண்டனை கூட விதிக்க வாய்ப்புள்ளது.
TN Job “FB Group” Join Now
இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட கிராமப் புறங்களை ஆய்வு செய்தோம், அதில் ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் வீட்டில் வைத்திருக்க முடியாத நிலை, வறுமை காரணமாக குழந்தைகளை வேலைக்கு அனுப்பியுள்ளனர். அதனால் இதுவரை இல்லாத அளவில் 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இது தொடர்பான விபரங்களை மாநில மனித உரிமை ஆணையம், குழந்தைகள் உரிமை ஆணையம், பள்ளி கல்விதுறை இயக்குனரிடம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.