தமிழக அரசு அலுவலர்கள் கவனத்திற்கு – தலைமைச் செயலாளர் கடிதம்!
தமிழகத்தில் அரசு அலுவகங்கங்களை அழகாக பராமரிப்பது குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு அவர்கள் தன் கைப்பட கடிதம் ஒன்றை எழுதி அதை அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
அரசு அலுவலகங்கள்:
தமிழகத்தில் சில அரசு அலுவலகங்கள் எவ்வித பராமரிப்புகளும் இன்றி அசுத்தம் அடைந்த நிலையில் உள்ளது. இது அங்கு வேலை பார்க்கும் அலுவலர்களுக்கும், பொது மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேசைகள் முழுவதும் பதிவேடுகள், கோப்புகள் போன்றவை சரியாக அடுக்கி வைக்கப்படாத நிலையில் களைந்து காணப்படுகிறது. இது பார்ப்பதற்க்கு முகச்சுழிவை ஏற்படுத்துகிறது. மேலும் நாற்காலிகள் உடைந்த மோசமான நிலையில் காட்சியளிக்கிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழக தலைமை செயலாளர் இறையன்பு அவர்கள் அரசு அலுவகங்கங்களை அழகாக பராமரிப்பது குறித்து கடிதம் ஒன்றை தன் கைப்பட எழுதியுள்ளார்.
கடைகள், வங்கிகளில் நுழைய கொரோனா தடுப்பூசி கட்டாயம் – கேரளாவில் தொடரும் கட்டுப்பாடுகள்!
அதில் அரசு அலுவலகங்களில் பயனற்ற நாற்காலிகளை அப்புறப்படுத்த வேண்டும். உபயோகமற்ற பொருட்களை உடனடியாக அகற்றி தனி அறையில் வைக்க வேண்டும். தேதிகள் முடிவடைந்த கடந்தாண்டு பதிவேடுகளை அப்புறப்படுத்தி பராமரிக்க வேண்டும். மேலும் மேசையின் மீது கோப்புகளை களையாத வண்ணம் ஒழுங்காக அடுக்கி வைக்க வேண்டும். பழுதடைந்த பயன்பாட்டில் இல்லாத கணினிகளை சரி செய்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று கடிதத்தில் கூறியுள்ளார்.
TN Job “FB Group” Join Now
கொரோனா தொற்று விரைவாக பரவி வருவதால் அரசு அலுவலகங்களில் சுகாதாரம் பேணுதல் அவசியமாகும். அவ்வப்போது வளாகத்தை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல் வேண்டும். மேலும் தூய்மை பணியாளர்களை கொண்டு கழிவறைகளை சுத்தம் செய்து துர்நாற்றமின்றி பராமரிக்க வேண்டும். தூய்மையான அலுவலகம், நம் அலுவலகத்தை நேசிக்க தகுந்ததாக மாற்றும். நம் பணியைத் தென்றலாக்கும் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டு அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.