தமிழகத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் வெற்றிகரமாக தொடக்கம் – முதல்வர் பெருமிதம்!

0
தமிழகத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் வெற்றிகரமாக தொடக்கம் - முதல்வர் பெருமிதம்!
தமிழகத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் வெற்றிகரமாக தொடக்கம் - முதல்வர் பெருமிதம்!
தமிழகத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் வெற்றிகரமாக தொடக்கம் – முதல்வர் பெருமிதம்!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவை பள்ளியில் அளிக்கும் முதல்வரின் காலை உணவு திட்டம் வெற்றிகரமாக நேற்று தொடங்கப்பட்டது. விழாவில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் குழந்தைகளுடன் உணவை உண்டு, அவர்களுக்கு ஊட்டி மகிழ்ந்தார்.

காலை உணவு திட்டம்:

தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு நலத்திட்டங்களை மாணவர்களுக்கு அறிவித்து, அவற்றை உடனடியாக செயல்படுத்தியும் வருகிறது. இதனால், மாணவர்கள் உயர்கல்வி முதல் ஆரம்ப கல்வி வரை தடையற்ற கல்வியை பெறும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில், அரசு பள்ளியில் பயிலும் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை உணவை அரசு சார்பில் அளிக்க உள்ளதாகவும் இந்த திட்டத்தை பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டது.

அதுபோல், நேற்று முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மதுரை நகரின் கீழ அண்ணாத்தோப்பில் உள்ள மதுரை மாநகராட்சி ஆதிமூலம் ஆரம்பப்பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் 1.14 லட்சம் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு அளிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது, குழந்தைகளுக்கு உணவினை பரிமாறியும், அவர்களுடன் சேர்ந்து அமர்ந்து உணவை ரசித்து சாப்பிட்டார், மேலும், அருகில் இருந்த குழந்தைகளுக்கு உணவை ஊட்டி மகிழ்ந்தார். குழந்தைகளுடன் பேசி, உணவு எப்படி இருக்கிறது? பிடித்திருக்கிறதா? என்றும், அவர்களின் தனிப்பட்ட கல்வி விவரங்களையும் முதல்வர் கேட்டறிந்தார்.

PM கிசான் முதியோர் ஓய்வூதிய திட்டத்தில் மாதம் ரூ.3,000 – பதிவு செய்து நீங்களும் பயனடையுங்க!

Exams Daily Mobile App Download

அதன்பின், நடந்த விழாவில் முதலவர் இந்த திட்டத்தை பற்றி பேசி பெருமிதம் அடைந்தார். குறிப்பாக, முதல்வரின் உரையில், “பசித்த வயிறுகளுக்கு உணவாக, தவித்த வாய்க்குத் தண்ணீராக, திக்கற்றவர்களுக்குத் திசைகாட்டியாக, யாருமற்றவர்களுக்கு ஆறுதலாக இருக்கப்போகும் கருணை வடிவான திட்டம்தான் இந்த காலை உணவு வழங்கும் திட்டம். மாணவர்களின் பசியை போக்க எந்த தியாகமும் செய்ய தயார்” என்று கூறியது அனைவரையும் நெகிழச் செய்தது. நேற்று முதல் கட்டமாக மதுரையில் தொடங்கி வைக்கப்பட்ட இந்த திட்டம் இன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு ஆரம்ப பள்ளியிலும் செயல்படுத்தப்பட்டது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!