தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்காக புதிய திட்டம் – முதல்வர் துவக்கி வைப்பு!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் 3 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செல்கிறார். மேலும் அம்மாவட்டங்களில் பல புதிய திட்டங்களையும் தொடங்க உள்ளார் .
முதல்வர் சுற்றுப்பயணம் :
தமிழக அரசானது பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. அது தொடர்பாக பல புதிய திட்டங்களும் ஒவ்வொரு நாளும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தின் 3 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செல்ல உள்ளதாகவும் மற்றும் அங்கு புதிய திட்டங்களை தொடங்க உள்ளதாக தகவல் வெளியிடபட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
முதல்வர் ஸ்டாலின் திருச்சி ,பெரம்பலூர் ,அரியலூர் ஆகிய மாவட்டங்களுக்கு வரும் 28ம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மேலும் திருச்சியை அடுத்த காட்டூர் பாப்பாக்குறிச்சி ஆதிதிராவிடர் பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்கு சென்று அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதத்தில் பள்ளி மாணவர்களிடையே கற்றலை மேம்படுத்தும் வகையில் ‘ஸ்டெம் ஆன் வீல்ஸ்’ என்ற புதிய திட்டத்தினை தொடங்கி வைக்கிறார் .
சென்னையில் ஏராளமான சிறப்பம்சங்களுடன் வர இருக்கும் புதிய திட்டம் – வெளியான சூப்பர் தகவல்!!
Exams Daily Mobile App Download
அதனை தொடர்ந்து அரியலூர் கங்கை கொண்ட சோழபுரம் அருகே மாளிகை மேட்டில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை பார்வையிட உள்ளார் மற்றும் பெரம்பலூரில் கோத்தாரி சர்க்கரை ஆலையில் புதிய அலகினை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.