சென்னையில் ஏராளமான சிறப்பம்சங்களுடன் வர இருக்கும் புதிய திட்டம் – வெளியான சூப்பர் தகவல்!!
தமிழகத்தில் ஏற்கனவே மின்சார வாகனம் தொடர்பான அறிவிப்புகள் வெளியானது. இந்த நிலையில் மின்சார வாகனத்திற்கான முதல் கட்ட திட்டத்தை கிரேட்டர் சென்னை மாநகராட்சி வகுத்துள்ளது. தற்போது இத்திட்டத்தின் சிறப்பம்சங்களை குறித்து விரிவாக பார்ப்போம்.
மின்சார வாகனங்கள்
தமிழகத்தில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த மின்சார வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தற்போது சென்னை மாநகரத்தில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தவும் மற்றும் அதற்கான பவர் சார்ஜிங் நிலையங்களை உருவாக்கவும் கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் (GCC) திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளது. இது தொடர்பாக விரைவில் ஆய்வு கூட்டம் ஒன்றை நடத்த உள்ளது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இந்த திட்டத்தின் சிறப்பம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்த திட்டத்தில் பொதுமக்கள் பயன்படுத்தி வரும் பொது போக்குவரத்துகளை மின்சார வாகனங்களாக மாற்றப்படும் எனவும் சென்னையில் அனைத்து இலகுரக வாகனங்களும் மின்சார வாகனங்களாக மாற்றப்படும் எனவும் வகுக்கப்பட்டுள்ளது. மேலும் மின்சார வாகனங்கள் ஜார்ஜ் ஏற்றி கொள்ள வசதியாக அரசு அலுவலகங்கள் மற்றும் சாலையோரங்களில் ஒவ்வொரு 25 கிமீக்கும் பவர் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும் என திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ரூ.30 கோடி செலவில் கைத்தறி அருங்காட்சியகம் – முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
இதே போன்று சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள், உணவகங்கள் மற்றும் பல மாடிக் கட்டிட தொகுதிகளிலும் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் மின்சார வாகனங்கள் வாங்குவதற்கு பல்வேறு சலுகைகள் அறிமுகப்படுத்தப்படும் என மின்சார வாகன விரிவாக்க திட்டத்தை வகுத்துள்ளது. இத்திட்டம் விரைவில் தமிழக அரசால் வெளியிடப்பட்டு செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.