தமிழகத்தில் நாளை முதல் ரூ.2000 நிவாரணம் வழங்கல் – முதல்வர் அறிவிப்பு!!
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் இரண்டாம் தவணை கொரோனா நிவாரணம் ரூ.2000 நாளை முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பிறந்தநாளையொட்டி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நிவாரணம்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. கடந்த வாரங்களில் தினசரி கொரோனா பாதிப்பு 35 ஆயிரத்தை நெருங்கியது. இதனால் தமிழக அரசு கடுமையான ஊரடங்கை மே 24 முதல் அமல்படுத்தியது. அனைத்து கடைகளும் மூடப்பட்டு மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியே வர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
மேலும் மக்களுக்கு வீடுகளுக்கே சென்று காய்கறிகள், பழங்கள், மற்றும் மளிகை பொருள்கள் விநியோகம் செய்ய அரசு ஏற்பாடு செய்துள்ளது. தளர்வுகளற்ற முழு ஊரடங்கு காரணமாக மக்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு தரப்பில் ரூ.4000 கொரோனா நிவாரணமாக வழங்கப்பட உள்ளதாக அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
தமிழகத்தில் ஜூன் 8 முதல் முழு ஊரடங்கில் தளர்வுகள்? எதற்கெல்லாம் அனுமதி!
அதற்கான முதல் தவணை மே மாதம் வழங்கப்பட்டது. இந்நிலையில் நாளை (ஜூன் 3) கலைஞர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி கொரோனா இரண்டாம் நிவாரண தொகை ரூ.2000 மற்றும் 13 மளிகை பொருள்கள் அடங்கிய தொகுப்பும் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்க உள்ளார்.