சென்னைபல்கலை முதுநிலை பட்டப்படிப்பு தேர்வு முடிவுகள் – நாளை வெளியீடு!
தமிழகத்தில் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி முதுகலை பட்டபடிப்புகளான எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.எஸ்.சி ஆகியவற்றின் தேர்வு முடிவுகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் என சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
தேர்வு முடிவுகள் :
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஓராண்டு காலமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்றது. இந்த நிலையில் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுக்க தொடங்கியது. இதனால் மீண்டும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA ) உயர்வு – மாநில வாரியாக முழு விபரங்கள்!
இதனால் நேரடி தேர்வுகள் நடத்த முடியாததால் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதே போல் தொலைநிலைக் கல்வி மூலம் பயிலும் மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. எல்லோருக்கும் எப்போதும் கல்வி என்ற நோக்கோடு தொடங்கப்பட்ட தொலைநிலை கல்வி மூலம் தமிழகம் முழுவதும் ஏராளமானோர் பட்டப்படிப்புகள் பயின்று வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
பணிக்கு செல்பவர்களும் பகுதி நேரமாக படிக்கும் வாய்ப்பை தொலைநிலைக் கல்வி வழங்குகிறது. சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி செமஸ்டர் தேர்வு கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. இதில் முதுகலை படிப்புகளான எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.எஸ்.சி ஆகியவற்றின் தேர்வு முடிவுகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் என சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.