அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA ) உயர்வு – மாநில வாரியாக முழு விபரங்கள்!

0
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA ) உயர்வு - மாநில வாரியாக முழு விபரங்கள்!
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA ) உயர்வு - மாநில வாரியாக முழு விபரங்கள்!
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA ) உயர்வு – மாநில வாரியாக முழு விபரங்கள்!

பல மாநில அரசுகளும் தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படியினை 17% ல் இருந்து 28% ஆக ஜூலை 2021 முதல் உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், மாநில வாரியான விவரங்களை இந்த பதிவில் .காண்போம்.

7 வது ஊதியக் குழு:

மத்திய அரசின் 48 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கான டிஏ மற்றும் டிஆர் கடந்த மூன்று தவணைகளாக நிலுவையில் வைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து அகவிலைப்படி உயர்வு குறித்து மத்திய அரசு கடந்த மாதத்தில் அறிவித்தது. அதன்படி, டிஏ 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தப்பட்டு ஜூலை மாதம் முதல் அமலுக்கு வருவதாக அறிவித்தது. மத்திய அரசிற்கு இந்த DA உயர்வினால் கூடுதலாக ஆண்டுக்கு ரூ.34,401 கோடி ரூபாய் செலவாகும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் கூறினார்.

Tokyo Olympics Day 15, India Schedule List on August 06 – முழு விபரம் இதோ!

மத்திய அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து பல மாநில அரசுகளும் தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வினை அறிவித்தது. மாநில வாரியான அரசுகளின் அறிவிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசம்

உத்தரபிரதேச மாநில அரசு மத்திய அரசின் உத்தரவின்படி அகவிலைப்படி 28 சதவீதமாக உயர்த்தப்படும் என்று அறிவித்தது. இந்த மாற்றத்தால் சுமார் 16 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் 12 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.

ஜம்மு காஷ்மீர்

ஜம்மு -காஷ்மீர் அரசு, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 28 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இந்த மாற்றம் ஜூலை 1, 2021 முதல் நடைமுறைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

TN Job “FB  Group” Join Now

ஜார்க்கண்ட்

ஜூலை 1 முதல் ஜார்க்கண்ட் மாநில அரசு ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 17 ல் இருந்து சதவீதம் 28 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

ஹரியானா

ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் சமீபத்தில் அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 17 ல் இருந்து 28% ஆக அதிகரிப்பதாக அறிவித்துள்ளார். அதன்படி, ஜனவரி 1, 2020, ஜூலை 1, 2020 மற்றும் ஜனவரி 1, 2021 ஆகிய மூன்று தவணைகளாக அகவிலைப்படி உயர்வு நிலுவையில் வைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உயர்வு ஜூலை 1,2021 முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா

கர்நாடகா மாநில அரசு கடந்த மூன்று தவணைகளுக்கான அகவிலைப்படியை 11.25 % இருந்து 21.5 ஆக உயர்த்தியுள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு முதல் கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக மாநில அரசு அகவிலைப்படியை நிறுத்தி வைத்திருந்தது. புதிய DA உயர்வு ஜூலை முதல் அமலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான்

ராஜஸ்தான் அரசு தனது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வை 17% ல் இருந்து 28% ஆக உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!