சென்னை: ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.856 உயர்வு – பொதுமக்கள் அதிருப்தி!
தமிழகத்தில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்றைய விற்பனையில் சவரனுக்கு ரூ.856 என அதிரடியான வகையில் உயர்ந்துள்ளது. இந்த திடீர் உயர்வு வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
விலை உயர்வு
சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக அதிகரித்து வரும் ஆபரணத்தங்கத்தின் விலை இன்றைய விற்பனையிலும் எதிர்பாராத அளவுக்கு உயரத்தை அடைந்துள்ளது. பொதுவாக இந்திய மார்க்கெட்டில் தங்கத்தின் மீதான விற்பனை மற்றும் முதலீடுகளுக்கு எப்போதும் பஞ்சம் இருக்காது. ஏனென்றால் ஆபரணத்தங்கங்கள் நம் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு முக்கியமான ஒரு விஷயமாக கருதப்படுகிறது. தவிர இது போன்ற தங்க நகைகள் ஒருவரது வாழ்க்கை தரத்தை நிர்ணயிக்கும் முக்கிய காரணியாகவும் கருதப்படுகிறது.
Exams Daily Mobile App Download
இதனால் இந்திய மக்களுக்கும், தங்க நகைகளுக்கும் என்றைக்கும் பிரிக்க முடியாத ஒரு பந்தம் காணப்படும். ஆனால் சமீப காலமாக தங்க நகை மார்க்கெட்டில் ஏற்படும் லாப, நஷ்டங்கள், போர் விளைவுகள் எல்லாம் ஆபரணத்தங்கத்தின் தொடர்ச்சியாக விலையை ஏற்ற, இறக்கம் செய்து வருகின்றன. இதனால் வாடிக்கையாளர்கள் எப்போது தங்கத்தை வாங்குவது என்று தெரியாமல் குழம்பி வருகின்றனர். குறிப்பாக, காலை விற்பனையில் குறைந்திருக்கும் ஆபரணத்தங்கத்தின் விலை மாலையில் அதிரடியாக உயர்ந்து வாடிக்கையாளர்களை அதிருப்தியாக்கி வருகிறது.
நாடு முழுவதும் அக்னிபாத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு – சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்!
அதனால் நகை வாங்க செல்லும் முன் அன்றைய நாளுக்கான விற்பனை விவரங்களை வாடிக்கையாளர்கள் தெரிந்து வைத்துக்கொள்வது நல்லதாகும். அந்த வகையில் சென்னையில் இன்றைய விற்பனையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.856 என அதிரடியாக உயர்ந்துள்ளது. இது தவிர ஒரு கிராம் தங்கம் ரூ.4,785க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல ஒரு சவரன் நகை ரூ.38,280க்கும் இப்போது விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.