நாடு முழுவதும் அக்னிபாத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு – சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்!
மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வலுபெற்றது. இந்நிலையில் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி ஆளும் பஞ்சாப் மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தீர்மானம் நிறைவேற்றம்:
மத்திய அரசு அக்னிபாத் என்ற பெயரில் புதிய ராணுவ ஆட்சேர்ப்புக் கொள்கையை அண்மையில் வெளியிட்டது. இந்த திட்டத்தின் கீழ் ராணுவத்தில் பணிக் காலம் 4 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டு வீரர்கள் சேர்க்கப்படுவர் என அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த திட்டத்திற்கு எதிராக வட இந்தியாவில் குறிப்பாக பீகாரில் மிகப் பெரும் வன்முறை வெடித்தது. மொத்தமாக 60க்கும் மேற்பட்ட ரயில்கள் தீக்கிரையாக்கப்பட்டன. மேலும் பல நூறு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து மேற்கு வங்கத்திலும் இதனால் வன்முறை விஸ்வரூபம் எடுத்தது.
Exams Daily Mobile App Download
தென்னிந்தியாவில் தெலுங்கானாவின் செகந்திராபாத் ரயில் நிலையம் தாக்கப்பட்டு போர்க்களமானது. மேலும் தமிழகத்தில் வேலூர், மதுரையில் போராட்டங்கள் நடைபெற்றன. இதனால் பல நூறு ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த தாக்குதல்களால் ரயில்வே துறைக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அக்னிபாத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி பஞ்சாப் மாநில சட்டசபை நேற்று தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. அதாவது பஞ்சாப் சட்டசபையில் முதல்வர் பகவந்த் மான் இத்தீர்மானத்தை நேற்று தாக்கல் செய்தார்.
தமிழக அங்கன்வாடி மையங்களில் LKG, UKG வகுப்புகள் குறித்த செயல்முறை – கல்வி இயக்குனர் வெளியீடு!
மேலும் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களான அஷ்விணி சர்மா மற்றும் ஜங்கி லால் மகாஜன் தவிர மற்ற அனைவரும் ஆதரவளித்த நிலையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து பேசிய பகவந்த் மான், அக்னிபாத் திட்ட விவகாரத்தை பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் முன்வைக்க உள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும் இந்தத் திட்டம் நாட்டின் இளைஞர்களுக்கு எதிராக உள்ளதாக பகவந்த் மான் குறிப்பிட்டார். மேலும் காங்கிரஸ் மூத்த தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான பர்தாப் சிங் பஜ்வா அக்னிபாத் திட்டம் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார்.