சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடி உயர்வு – நகைப்பிரியர்கள் அதிருப்தி!
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 32 உயர்ந்துள்ளது. இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது நகைப்பிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை:
இந்தியாவில் தங்கம் என்பது முன்பெல்லாம் ஒரு வகையான கலாசாரமாக இருந்து வந்தது. தற்போது அந்த நிலை மாறி தங்கம் ஒரு வகையான சேமிப்பு, சமூக அந்தஸ்து என்ற நிலைக்கு வந்து விட்டது. இந்த நிலையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு பங்கு சந்தை சரிவு, உலக பொருளாதாரம் போன்றவை காரணங்களாக கூறப்படுகிறது. மேலும் இந்தியாவில் ஆபரணத் தங்கம் விலை மாற்றத்தில் அமெரிக்க டாலருக்கு மிக முக்கிய பங்கு உண்டு. ஏனெனில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரிகிறது என்றால் தங்கம் விலை அதிகரிக்கும். அதே போல முதலீட்டாளர்கள் அதிகம் தங்கத்தின் மீது முதலீடு செய்ய ஆரம்பித்தனர்.
Exams Daily Mobile App Download
இதுவும் தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து கடந்த மாதங்களில் நிலவிய உக்ரைன் – ரஷ்யா இடையேயான போரின் தாக்கத்தாலும் தங்கம் விலை உயர்ந்து காணப்பட்டது. தற்போது தங்கம் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளதாலும் தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஜூலை 1-ம் தேதி ஒரு சவரன் தங்கத்தின் விலை 856 ரூபாய் உயர்ந்தது. இந்த விலை உயர்வு நகைகள் வாங்க நினைத்தவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று(ஜூலை 8) இரண்டாவது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை – அரசு உத்தரவு !
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 32 உயர்ந்து, ரூ.37,408-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் ரூ.4 உயர்ந்து ரூ.4,676-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதே போல சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 110 காசு உயர்ந்து, ரூ.62.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை நேற்று ரூ. 544 குறைந்த நிலையில் இன்று உயர்ந்துள்ளது நகைப்பிரியர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் வரும் நாட்களில் தங்கம் விலை இன்னும் உயர வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.