தமிழகத்தில் இன்று(ஜூலை 8) இரண்டாவது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை – அரசு உத்தரவு !
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்றும் (ஜூலை 8) இரண்டாவது நாளாக விடுமுறை விடப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பள்ளிகளுக்கு விடுமுறை:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த ஒருவார காலமாக கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக மழை அடிவாரத்தில் உள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் வால்பாறை, ஆழியார் அணை பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர் மழை காரணமாக அந்த அணைகள் நிரம்ப வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்றும் (ஜூலை 8) இரண்டாவது நாளாக விடுமுறை விடப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தொடர்ந்து கனமழை பெய்வதால் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. அதனை தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகள் நலன் கருதி இன்றும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
ஜூலை 9 வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு – கனமழை எதிரொலி!
தென்மேற்கு பருவமழை கடந்த ஒரு வாரமாக நீலகிரி, மேட்டுப்பாளையம் போன்ற பகுதிகளில் வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பில்லூர் அணையின் நீர் மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் விநாடிக்கு 800 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. மேலும் நேற்று அதிகாலை 10 ஆயிரம் கன அடியாக அணையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதையொட்டி அணையின் நீர் மட்டம் 96 அடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.