புத்தக மொழிபெயர்ப்பு ஊக்கத்தொகையாக ரூ.3 கோடி ஒதுக்கீடு – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!

0
புத்தக மொழிபெயர்ப்பு ஊக்கத்தொகையாக ரூ
புத்தக மொழிபெயர்ப்பு ஊக்கத்தொகையாக ரூ
புத்தக மொழிபெயர்ப்பு ஊக்கத்தொகையாக ரூ.3 கோடி ஒதுக்கீடு – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!

தமிழகத்தில் நடத்தப்படும் புத்தக கண்காட்சியில், மொழிபெயர்ப்பு ஊக்கத்தொகையாக ரூ.3 கோடி ஒதுக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். மேலும், கூடுதல் நாட்களுக்கு புத்தக கண்காட்சியை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தக கண்காட்சி

சென்னை நந்தனம் YMCA வளாகத்தில் ஜனவரி 6 ஆம் தேதி முதல் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சிக்கு பல்வேறு இடங்களில் இருந்து தினம்தோறும் நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் கலந்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில், புத்தக கண்காட்சியில் சர்வதேச புத்தகங்களுக்கான காட்சியிடல் ஜனவரி 16 முதல் ஜனவரி 18 வரை நடைபெற்றது. இந்த கண்காட்சியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த படைப்புகள் இடம்பெற்றிருந்தன.

சிறப்பு SI பதவி உயர்வுக்கு 10 ஆண்டுகள் பணி அனுபவம் – உயர்நீதிமன்றம் உத்தரவு!!

Telegram Updates for Latest Jobs & News – Join Now

அந்த வகையில் சர்வதேச புத்தகங்களுக்கான காட்சியிடல் இன்று முடிவுற்றிருக்கும் நிலையில், தமிழக முதல்வர் முக ஸ்டாலின் புத்தக கண்காட்சி தொடர்பாக சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, அடுத்த ஆண்டு முதல் புத்தகங்களின் மொழிபெயர்ப்பு ஊக்கத்தொகைக்காக ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதே போல, அடுத்த ஆண்டுக்கான சர்வதேச புத்தக காட்சியை கூடுதல் நாட்களுக்கு நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்றும் முதல்வர் உறுதியளித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!